search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposition party"

    • கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
    • 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோஷி தெரிவித்தார்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 22 அன்று நிறைவடைய உள்ளது. இக்கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இடம்பெறும்.

    முன்னதாக பாராளுமன்ற நடவடிக்கைகள் கூச்சல், குழப்பங்கள், தடைகள் ஏதுமின்றி நடைபெற அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பை கோரும் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள், கண்டனங்கள் உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

    எதிர்கட்சிகள் தரப்பில், உயர்ந்து வரும் விலைவாசி, புலனாய்வு அமைப்புகளின் துஷ்பிரயோகம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆளும் பா.ஜ.க. கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவமும், சொல்லகராதியையும் எதிர்கட்சிகள் கோரின.

    இக்கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும் போது, "19 மசோதாக்களையும், 2 நிதி மசோதாக்களையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைத்து விஷயங்களையும் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்கட்சிகள் விவாதங்களுக்கான சூழலை அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும். பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்" என தெரிவித்தார்.

    ஆளும் கட்சி திட்டமிட்டபடி என்னென்ன மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறப்படும் என்பது வரப்போகும் நாட்களில் தெரிய வரும்.

    • மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அலர்ட் மெசேஜ்
    • ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

    எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக ஒட்டு கேட்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இந்திய அரசில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில்தான் "அரசின் ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள், ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட உங்கள் ஐபோனை ரிமோட் மூலம் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. இது தவறான அலர்ட் ஆகக்கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்" என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், பவன் கேரா, கே.சி. வேணுகோபால், சுரியா ஸ்ரீநாத், டி.எஸ். சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா,

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா உள்ளிட்ட எம்.பி.க்கள் பலருக்கு அலர்ட் மெசேஜ் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய பா.ஜனதா அரசு தங்களை உளவு பார்த்து ஒட்டு கேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் "இந்த பிரச்சனையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது. விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது" என்றார்.

    இந்த நிலையில் இந்தியாவின் கணினி எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) விசாரணையை தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்று ஆப்பிள் எதிர்க்கட்சிகளுக்கு அலர்ட் மெசேஜ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

    • அ.தி.மு.க வினர் ஒற்றுமையாக இருந்து வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார்.
    • இந்து முன்னணி மாநிலத்தலைவர் பேட்டி

    கரூர்:

    தமிழகத்தில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கரூர் வந்திருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

    சர்ச் வருமானத்தை கிறிஸ்தவர்களும், மசூதி வருமானத்தை முஸ்லிம்கள் மத வளர்ச்சிக்காகவும், மத மாற்றத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டால் உடனே வழங்கப்படுகிறது. ஆனால் இந்துக்கள் கட்டிடம் கட்டிவிட்டு அனுமதி கேட்டாலும் வழங்கப்படுவதில்லை. இந்துக்கள் உரிமை பறிக்கப்படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்து மாணவர்களுக்கு இல்லை.

    கோயில் நிலங்கள் கோயில் வளர்ச்சிக்கு பயன்படவேண்டும். கோயில் நிலங்களில் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கோயில் நிலங்கள் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 4.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் உள்ளது.

    அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். தமிழகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்றார். 

    • அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
    • ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது.

    சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும் திட்டங்களை குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை ஆளும் தி.மு.க. செய்துவரும் ஊழல் குறித்து கூறினால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான 2-வது பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அந்த பட்டியல் முதல் பட்டியலை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

    ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மதுரை ஆதீனம் மீது அமைச்சர் கங்கணம் கட்டிக்கொண்டு பேசி வரும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை, திமுக தான் உருவாக்கி வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #Tamilisaisoundararajan #JactoGeo
    திருப்பூர்:

    பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார்.

    இதற்கான பொதுக்கூட்ட மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பாஸ்போர்ட்டு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

    இதனால் மோடி ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதி திருப்பூர் வரும் மோடி ஏராளமான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்திற்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்,ரவிசங்கர் பிரசாத், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்தியநாத் ஆகியோர் வருகிறார்கள்.

    இதனால் வாக்குச்சாவடி அளவில் பாரதிய ஜனதாவிற்கு பலன் அதிகரிக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இதில் தமிழகத்தின் பங்கு நிச்சயம் அதிகம் இருக்கும்.

    எதிர்கட்சிகள் விளம்பரத்துக்காக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு பெண்களின் படிப்புக்காக செலவழித்து உள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் 10 லட்சம் போலி ரேசன் கார்டுகள் கண்டறியப்பட்டு உள்ளது. பல லட்சம் போலி லைசென்ஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் 10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

    கடந்த 1971-ம் ஆண்டு வறுமையே வெளியேறு என்ற கோ‌ஷத்துடன் தான் இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை.

    ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ராகுல் காந்தி கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. மோடி தொடங்கி வைத்த வங்கி கணக்கில் தான் ராகுல் பணம் போடுவதாக சொல்கிறார்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்து விட்டு பின்னர் இது குறித்து ராகுல் பேசட்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் 800 விவசாயிகள் தான் பயன் பெற்றனர்.

    மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என தெரியாமல் அவர் பதட்டத்துடன் இருக்கிறார்.

    தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். கூவத்தை சுத்தப்படுத்துவோம் என கூறினார்கள். ஆனால் அதனை செய்யவில்லை.

    தற்போது மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து நடத்துகிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.



    மு.க.ஸ்டாலின், வைகோ, காங்கிரஸ் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது. அவர்களை இலங்கை சம்பவத்தை கேட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேறுபாடு உள்ளது.

    தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    நான் கொடுக்கும் அறிக்கை, பேட்டியை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சரியாக படிக்காமல் பேசி வருகிறார். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசினேன்.

    அதற்கு திருநாவுக்கரசர் மற்ற 30 தொகுதிகளை விட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் 10 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தான் நடைபெற்றது.

    அந்த 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என தான் நான் பேசினேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ரூ. 1300 கோடி மத்திய மந்திரி சபையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Tamilisaisoundararajan #JactoGeo
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் என படேல் இன தலைவரான ஹர்திக் படேல் கூறியுள்ளார். #HardikPatel #RajasthanElection #BJP
    உதய்பூர்:

    படேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதை உணர முடிந்தது. இதனால் 7-ந் தேதி நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும். இப்போது உள்ள நிலையில் அதுதான் பாரதீய ஜனதாவுக்கு சரியான இடம் தான். மக்கள் அந்த கட்சிக்கு எதிராக ஓட்டு போடும் மனநிலையில் உள்ளனர்.



    குறிப்பாக வேலை வாய்ப்பை உருவாக்காத பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன். ஆனால் எனது அமைப்பான கிஷான் கிராந்தி சேனா சார்பில் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை விளக்குவதற்கு மக்களை சந்திப்பேன்’ என்றார். #HardikPatel #RajasthanElection #BJP
    நிவாரணம் கிடைக்காததால் தான் பொதுமக்கள் போராடுகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் சந்தித்தேன்.

    கஜா புயலானது பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதும், குறைந்தபட்சம் பத்து நாட்களாவது முகாம்களில் மக்கள் தங்கும்படி நேரும் என்பதை முன்கூட்டியே யோசித்து முறையான திட்டமிடல் இல்லாததால், அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், ஜெனரேட்டர், மருத்துவ வசதி போன்ற முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யத்தவறிவிட்டது என்பதை அறிய முடிந்தது.

    போதிய அளவில் நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சுகாதார குழுவைக் கூட பார்க்க முடியவில்லை என்று எங்களிடம் மக்கள் புலம்புகின்றனர்.

    இதனிடையே, பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளில் இறந்துபோன கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய இயலாததாலும், மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தாததாலும் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ள இந்த சூழலை மனதில்கொண்டு தொற்று நோய் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.

    கிணற்றில் நீர் இருக்கிறது. ஆனால், அதை நீர் தொட்டிக்கு மேலேற்ற மின்சார வசதியில்லை. தனிநபர் வீடுகளில் மட்டுமல்ல, ஊர் பொது குடிநீர் தொட்டிக்கும் இதுதான் நிலைமை. இந்த வி‌ஷயத்தில் கவனம் செலுத்தவேண்டிய உள்ளாட்சித் துறையின் செயல்பாடு மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    வேளாண் தொழிலையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களின் பாதிப்பை பார்வையிடவோ, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறியவோ வேளாண்மைத்துறை மற்றும், கிராம நிர்வாக அதிகாரிகளையாவது உடனடியாக கிராமங்களுக்கு அனுப்பி கணக்கீடு பணியை விரைந்து செய்திட வருவாய்த் துறையும் முன்வரவில்லை.

    புயலின் காரணமாக இதுவரை சுமார் 90,000 மின் கம்பங்கள் சாய்ந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளதாக அரசு சொன்னது. ஆனால், 10,000-க்கும் குறைவான புதிய மின்கம்பங்களே இருப்பில் உள்ளதாக மின்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். இதை வைத்து எப்படி பாதிப்பை சரிசெய்து, மின் விநியோகத்தை சீராக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.



    எனவே, வெறுமனே புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிடுவதை நிறுத்தி விட்டு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் என்னென்ன பாதிப்பு இருந்தது? எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை தனித்தனியாக வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி மக்களுக்கும், எதிர்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த தென்னை, வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலுக்கு பலியானதை அம்மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் விரும்பாத திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் உபயோகமில்லாத பணிகளுக்கு நிதியை அள்ளி இறைக்கும் அரசு, இயற்கை பேரிடரால் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க மறுக்கிறது.

    தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, அதைத் சார்ந்த கூலித் தொழிலாளிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தை இந்த அரசு வழங்கி அவர்கள் வாழ்வை மறு சீரமைக்க வேண்டும்.



    ஒவ்வொரு புயல்வரும் போது மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதும்; ஆனால், மாநில அரசு கேட்கும் நிதியை உரிய நேரத்தில் தராமல் தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தருவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு ஏன் இடைகால நிவாரணம் கேட்கவில்லை?

    பசிக்கு உணவு இல்லை, உடுத்த உடை இல்லை, படுத்துறங்க வீடூ இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இருட்டில் ஒளியேற்றிட மெழுகுவர்த்தி இல்லை, இப்படி அத்தியா வசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியும் இல்லாமல், வாழ்வாதாரத்தை புயலுக்கு காவு கொடுத்துள்ள அப்பாவி மக்களுக்கு ஏனென்று கேட்க அரசுமில்லை என்று வெம்பி அழும் ஓலங்களே போகுமிட மெல்லாம் கேட்க முடிகின்றது.

    உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ கிராம நிர்வாக அதிகாரிகளோ புயல் பாதித்த பகுதிகளை உடனடியாக சென்று மக்களுக்கு தேவையானவற்றை அறிய தவறியதன் காரணம்தான் அவர்களை கண்டாலே மக்கள் கொதிக்கின்றனர்.



    இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவதால்தான் மக்கள் போராடுகிறார்கள் என்று வெட்டி அரசியல் செய்வதும், கேள்வி கேட்பவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியதாகும்.

    மேலும், மக்கள் விரோத அரசு என்று முத்திரை பெற்ற பின், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    ஆகவே, இனியாவது பழனிசாமி அரசு தங்களது பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    சென்னை:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

    இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதே போன்ற பருவமழை காலங்களில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடந்து இருப்பதாகவும், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.



    இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலைதான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருந்தது.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முறியடிக்கப்பட்டது. இதை மனதில் கொண்டே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

    ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது.

    தமிழக இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
    ஆரணி:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.

    தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

    இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
    புதுவை சட்டசபைக்குள் 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க. 2, சுயேச்சை 1 என மொத்தம் ஆளும் கட்சியின் பலம் 18 ஆக உள்ளது.

    சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 8, அ.தி.மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் பலம் 12 ஆக இருந்தது.

    தற்போது 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

    இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகளும் விலகி வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது.



    தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக யாரும் இல்லை. அந்தந்த பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது மக்களிடம் பேசி, அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ளாமல் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று கூறுபவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #DMK
    ×