search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "draft legislations"

    • கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
    • 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோஷி தெரிவித்தார்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 22 அன்று நிறைவடைய உள்ளது. இக்கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இடம்பெறும்.

    முன்னதாக பாராளுமன்ற நடவடிக்கைகள் கூச்சல், குழப்பங்கள், தடைகள் ஏதுமின்றி நடைபெற அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பை கோரும் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள், கண்டனங்கள் உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

    எதிர்கட்சிகள் தரப்பில், உயர்ந்து வரும் விலைவாசி, புலனாய்வு அமைப்புகளின் துஷ்பிரயோகம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆளும் பா.ஜ.க. கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவமும், சொல்லகராதியையும் எதிர்கட்சிகள் கோரின.

    இக்கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும் போது, "19 மசோதாக்களையும், 2 நிதி மசோதாக்களையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைத்து விஷயங்களையும் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்கட்சிகள் விவாதங்களுக்கான சூழலை அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும். பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்" என தெரிவித்தார்.

    ஆளும் கட்சி திட்டமிட்டபடி என்னென்ன மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறப்படும் என்பது வரப்போகும் நாட்களில் தெரிய வரும்.

    ×