search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "customs"

    • அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
    • குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.

    பல நாடுகளில் பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப் பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.

    உணவு உண்ணுதல் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

    பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில், உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.


    எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே, நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

    சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.

    மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

    உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற அநாகரீகமான சத்தம் வராது.


    உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.

    தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.

    குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.


    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

    சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.

    எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின் குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை.

    • பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.
    • மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்.

    அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டப்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம், மேல்பாடி, வசந்தபுரம் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.

    விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை: கெங்கராம்பாளையம்(விழுப்புரம்), கொத்தட்டை(கடலூர்), ஆக்கூர் பண்டாரவாடை (மயிலாடுதுறை), விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

    • ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
    • தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்தும், சுங்கச்சா வடிகளில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விக்கி ரவாண்டி சுங்கச்சாவடியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு இன்று காலை 11.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாகனங்கள் செல்லும் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
    • வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
    • மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
    • சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.

    கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கப்பலூர் சுங்கச்சாவடிைய நீக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருமங்கலம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட  முதல் மாநாடு திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் செயலாளர் கண்ணன் மற்றும் பரமேஸ்வரன் சங்க கொடியேற்றி வைத்தனர்.

    இந்த மாநாட்டிற்கு கோட்ட தலைவர் பாண்டி யன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தினகரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சோலைமலை தொடக்க உரையாற்றினார்.கோட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வாசித்தார். 

    இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருமங்கலம்- மதுரை சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    திருமங்கலம் நகரில் உள்ள பஸ் நிலையத்தை  விரிவாக்கம் செய்திட விரைவில் உறுதி செய்திட வேண்டும். ெரயில்வே மேம்பாலம் கட்டிட வரைபடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பணிகள் தொடங்க இருப்பதால் உடனடியாக விரைந்து பணிகள் நடைபெற செய்ய வேண்டும். 

     ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டிட அலுவலகத்தின் பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தினை விரைவாக பெற்றுக் கட்டுமானப் பணி யினை நிறைவு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள்   நிறைவேற்றினர்.

    முடிவில் பொருளாளர் சோமசுந்தரம்   நன்றி கூறினார்.
    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.#Customsseized #foreigncurrency
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பணத்தை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
    துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்கானிஸ்தான் நாட்டு ஆசாமியிடம் இருந்து 10.81 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரளவின் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    அவரிடம் இருந்த சுமார் 10.61 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறையினர் கூறுகையில்,  இந்த நிதியாண்டில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சுமார் 254 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சுமார் 87 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம்  என தெரிவித்துள்ளனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
    ×