search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்பாடு"

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.
    • ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான தினேஷ், அஜித் ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். இதனை ராஜேந்திரன் கண்டித்தார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தினேசும், அஜித்தும் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் கூட்டாளிகளுடன் வந்த அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்து உருட்டு கட்டையால் அங்கிருந்த ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டு ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதல் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

    இதுகுறித்து ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×