search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர் சங்க கொடியேற்றியபோது எடுத்த படம்.
    X
    ஓய்வூதியர் சங்க கொடியேற்றியபோது எடுத்த படம்.

    கப்பலூர் சுங்கச்சாவடிைய நீக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    கப்பலூர் சுங்கச்சாவடிைய நீக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருமங்கலம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட  முதல் மாநாடு திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் செயலாளர் கண்ணன் மற்றும் பரமேஸ்வரன் சங்க கொடியேற்றி வைத்தனர்.

    இந்த மாநாட்டிற்கு கோட்ட தலைவர் பாண்டி யன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தினகரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சோலைமலை தொடக்க உரையாற்றினார்.கோட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வாசித்தார். 

    இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை  குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருமங்கலம்- மதுரை சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    திருமங்கலம் நகரில் உள்ள பஸ் நிலையத்தை  விரிவாக்கம் செய்திட விரைவில் உறுதி செய்திட வேண்டும். ெரயில்வே மேம்பாலம் கட்டிட வரைபடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பணிகள் தொடங்க இருப்பதால் உடனடியாக விரைந்து பணிகள் நடைபெற செய்ய வேண்டும். 

     ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டிட அலுவலகத்தின் பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தினை விரைவாக பெற்றுக் கட்டுமானப் பணி யினை நிறைவு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள்   நிறைவேற்றினர்.

    முடிவில் பொருளாளர் சோமசுந்தரம்   நன்றி கூறினார்.
    Next Story
    ×