என் மலர்
நீங்கள் தேடியது "Request"
- நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
- டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.
இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
- குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.
உடுமலை
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.
தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.
ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சிங்கமுத்து அய்யனார் குளக்கரை பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சிங்கமுத்து அய்யனார் கோவில் குளக்கரை பகுதி வழியாக நாரிமேடு, சமுத்துவபுரம்,லெட்சுமி நகர்,வெங்கடேஸ்வரா நகர், தைலா நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை செல்கிறது. இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வழியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ச்சியாக எரியாத நிலை உள்ளது. எனவே அவ்வழியாக மக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர் .அப்பகுதி கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக நகர்மன்ற கூட்டத்தில் முறையிட்டப்படியே உள்ளனர். இருப்பினும் தெரு விளக்குகள் எரிந்தபாடு இல்லை. அப்பகுதி சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் சூழலும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- முத்தனூர் பகுதியில் உபரி நீர் கால்வாயில்தூர்வார கோரிக்கை
- மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர், செட்டிதோட்டம், செல்வநகர் வழியாக முத்தனூர் பகுதியில் உள்ள புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டது.
விவசாயத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை காலங்களில் வெளியேறும் மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.
இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கால்வாய்க்குள் ஏராளமான செடி, கொடிகள் ஆள் உயரம் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாய் வழியாக உபரிநீரும் மழை நீரும் செல்ல முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் அதிக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றிட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைத் துறை செயல் படுகிறது. இந்த துறையில் போதைக்கு அடிமையான நோயாளிகள் உள்நோயாளி களாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வார்டில் உள்ள நோயாளிகளை கவனிக்க தற்காலி கமாக தொகுப்பூதி யத்தில் செவிலியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப் பட்டனர். அதன்படி செவிலியர், மன நல ஆலோ சகர், தரவு உள்ளீட்டாளர், இரவு காவலர், இதர பணியா ளர்கள் என சுமார் 13 பேர் வரை நியமனம் செய்ய ப்பட்டு இருந்தனர். அவர்க ளுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் செயல்பட்டு வந்தது.
நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை பழைய கட்டிடத்தில் போதைக்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 13 பேரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. மேலும் அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 22-ந்தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற செவிலியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனி பணிக்கு வரவேண்டாம். தங்களுக்கு ஊதியம் வழங்க டாஸ்மாக் நிறுவனம் இனி நிதி ஒதுக்காது என தெரிவித்து விட்டதால் இந்த மையத்தை கவனிக்க இனி ஊழியர்களை நியமிக்க முடியாது என்று அவர்க ளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்க ப்பட்ட செவிலி யர்கள் கூறுகையில், குடிப் பழக்க த்தால் பலரும் அடிமை யாகி இளம் தலைமுறை யினரும் சீரழிந்து வரும் நிலையில் மக்களிடம் வரவேற்பு பெற்ற இந்த மறுவாழ்வு மையம் நிதி ஒதுக்கப்படா ததால் முடக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் நிறு வனம் மூலம் உரிய நிதியை பெற்று தந்து எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
மாவட்டத்தில் குறைந்த பட்சம் மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அரசின் முடிவால் எங்களது வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கவனத்தில் எடுத்து எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்,
- ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
- கவுன்சிலிங் குழுவானது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு சில பள்ளி, கல்லூரி களில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற பிரச்சனைகள், பள்ளி பருவத்திலேயே மாணவர்க ளின் மனதில் ஆழமாக பதியும் சாதி குறித்த தவறான எண்ணங்கள், உள்ளிட்ட வற்றை கலையும் வண்ணமாக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி களில் மாணவர்களிடையே அனைவரும் சமம் என்ற உணர்வை தோற்றுவிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு மாவட்டந்தோறும் ஒரு வேன் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த வேனில் சென்று ஒவ்வொரு அரசு பள்ளி யிலும் படிக்கும் மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகைகள் செய்யப்பட்டி ருந்தது.
இதற்காக அந்த வேனில் ஒரு யோகா ஆசிரியர், ஒரு ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கு ஒரு கவுன்சிலிங் ஆசிரியர் என 3 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலிங் குழுவானது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அவ்வப்போது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.
மேலும் தற்கொலை குறித்த எண்ணங்களை கைவிடுவதற்கு மாணவர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மிகச்சிறந்த ஆலோசனை மையமாக இந்த திட்டம் விளங்கி வந்தது.
ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அதற்காக பயன்படுத்தப்பட்ட வேன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு காலமாக முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாங்குநேரியில் சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த வாரம் டவுனில் டியூசனுக்கு சென்று வந்த ஒரு சமுதாய மாணவன் மீது மற்றொரு சமுதாய மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்படி ப்பட்ட சூழ்நிலையில் காட்சி பொருளாக மாறி உள்ள இந்த வேனை பள்ளிக்கல்வி த்துறை அதிகாரி கள் மீண்டும் பயன்படுத்தி அதற்கென ஒரு தனி குழுவையும் ஆரம்பித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று மாண வர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், எட்டிமடை, க.க.சாவடி, அன்னூர், தெலுங்குபாளையம், கோவில்பாளையம் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் விவசாயிகளால் போதிய அளவு பயிர்களை சாகுபடி பண்ண முடியவில்லை. பல இடங்களில் நீர் வரத்து இல்லாததால் பயிர்கள் காய்ந்து போய் உள்ளன. எனவே கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழை வதை தடுக்கவும், மனித, விலங்கு மோதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசின் காப்பீட்டுத் தொகை, நிவாரணத் தொகை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு கிசான் கார்டு அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பங்களை கொடுத்து கிசான் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
பாரத பிரமதரின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை மாதந்தோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிசான் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதனை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட கலெக்டரின் விவசாய துறை நேரடி உதவியாளர் சபி அகமத், வேளாண்மை துறை இணை இயக்குனர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் பார்த்திபன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
- தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
- கடந்த 24-ந் தேதி முதல் நெல்லைக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியிடம், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
உலக தர வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியமான போக்குவரத்து மைய பகுதியாக உள்ளது.
கல்வி வேலை தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையமும் முதன்மை யானது.
கடந்த 24-ந் தேதி முதல் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.
இதனால் கோவில்பட்டி பகுதி மக்கள் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயணத் தேவைக்கான வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜா என்ற விஜி, செயலாளர் அசோக், துணைச் செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சந்தனகுமார், துணைத் தலைவர் ஜெய பாஸ், அசோக் குமார், பாலசுந்தரம், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், சந்தரக் கண்ணன் உள்ளிட்ட நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது.
- ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
நெல்லை:
தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் முக்கியமானது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம். நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில்களை கையாளுவதில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
நெல்லை ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வரும் ரெயில்கள் மற்றும் வடபகுதியில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தெற்கு நோக்கி வரும் ரெயில்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் அணிவகுத்து வருவதால் 5 நடைமேடைகள் போதுமானதாக இல்லை.
தற்போது சென்னை நோக்கி செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடையிலும், அனந்தபுரி- கன்னியாகுமரி ரெயில்கள் 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் - நெல்லை ரெயில் 3-வது நடைமேடையிலும், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் 4-வது நடைமேடையிலும், திருச்செந்தூர் - நெல்லை ரயில் 5-வது நடைமேடையையும் வந்து செல்கின்றன.
பின்னர் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரெயில் திருச்செந்தூர் ரெயிலுக்கு பின்பாக 5-வது நடைமேடையில் மெதுவாக கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. இதே நேரத்தில் தான் தூத்துக்குடி - நெல்லை ரெயில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு - நெல்லை ரெயில் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.
தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.
எனவே நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள இட நெருக்கடியை குறைப்பதற்கு கூடுதல் நடைமேடைகளை அமைத்து நெல்லையோடு நிற்கும் பாலருவி ரெயிலை தூத்துக்குடிக்கும், ஈரோடு நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த ரெயில் பயணி சுரேஷ் கூறுகையில், பாலக்காடு - நெல்லை பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உடனடியாக இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும்.
மதுரைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் செங்கோட்டை நாகர்கோவில், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயில்களையும் வடக்கில் இருந்து நெல்லை நோக்கி வரும் ரெயில்களையும் தாமதம் இல்லாமல் ரெயில் நிலையத்தின் உள்ளே வர முடியும். இவ்வாறு செய்வதால் திருச்செந்தூர், நெல்லை மற்றும் செங்கோட்டை நெல்லை ரெயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக அமையும். மேலும் கூடுதல் நடைமேடைகள் அமைத்தால் தான் வருங்காலங்களில் நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை.
- ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு
55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெற வில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே காரணம். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிடர் தமிழர் கட்சி
திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன் கொடுத்த மனுவில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல் முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர்.
இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
சீரான குடிநீர்
5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கொடுத்த மனுவில், எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி 1 மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீ