search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Leaders"

    • தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழகம் வர உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா மேலிடம் முடுக்கி விட்டு உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களாக சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 2-வது வாரம் அந்த பயணம் நிறைவு பெற உள்ளது. இது தொடர்பான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு முன்னதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வந்து பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழகம் வர உள்ளார்.


    இதற்கிடையே பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா 11-ந்தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர் பாரதிய ஜனதாவின் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தையும் ஆரம்பித்து வைப்பார்.

    அதுமட்டுமின்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவர் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த வாரம் தொடங்கி 2-வது வாரம் வரை தமிழக பாரதிய ஜனதா வட்டாரத்தில் மிகவும் விறுவிறுப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

    தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.

    அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.

    அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.

    எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாரதீய ஜனதா தலைவர்கள் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள் என்று மம்தா பானர்ஜி புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

    மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.

    சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.

    தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.


    பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.

    பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.

    இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.

    டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் மீது ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையகம் அமைந்துள்ளது. இதில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

    இதில் பாஜக தலைவர்களான பூபேந்திர யாதவ் மற்றும் ஜி வி எல் நரசிம்ம ராவ் ஆகியோர் பேட்டியளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ஒருவர், பாஜக தலைவர்கள் மீது ஷுவை கழற்றி வீசினார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா நகரத்தில் இன்று காலை பாஜக தலைவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். #BJPLeaderShotDead
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் குர்தா நகரத்தைச் சேர்ந்தவர் மங்குலி ஜனா. இவர் அந்நகரத்தின் மண்டல பாஜக தலைவர் ஆவார். இவர் நேற்றிரவு குர்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர், சற்றும் எதிர்பாராத விதமாக அவரை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்ட் சுட்டார். இதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜனாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நகரத்தின் நான்கு புற எல்லைகளையும் அடைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

    மங்குலி ஜனாவை கொன்றவரை கைது செய்ய வலியுறுத்தி குர்தா பகுதி பாஜகவினர் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களிடம் ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து கலைந்து செல்ல வேண்டியும் வலியுறுத்தினார். மேலும் இதற்கான பதில், தேர்தலில் மக்களின் வாக்குகளில் வெளிப்படும் எனவும் கூறினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து குர்தா தொகுதி பாஜக வேட்பாளர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். எனது 40 ஆண்டுகால அரசியலில் குர்தா பகுதியில் இது போன்ற கொடூரம் நடப்பது இதுவே முதல் முறையாகும்’ என கூறினார். #BJPLeaderShotDead

    உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது , வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Casefiled #ModelCodeofConduct
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய வாக்களர்களும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர்.

    தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது எனவும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் செயல்படுவதை தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அங்கு உள்ள ஆவணங்கள், மற்றும் வாக்கு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துவிட்டு செல்பி எடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செல்பி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Casefiled #ModelCodeofConduct



    கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவரும் எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தை கேலி செய்த பா.ஜ.க. இந்தியாவை அழிக்க கோமாளிகளும் பொய்யர்களும் திரண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. #MamataBanerjee #Megarally #BJPleaders
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.



    அவர்களின் பேச்சு வெவ்வேறு தலைப்புகளில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு கணைகளும் பாயத் தொடங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை கேலி செய்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் முகுல் ராய், ‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்காளம் மாநிலம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.

    மறுபடியும் இந்தியாவை அழிக்க பல்வேறு கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களான கலைஞர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும்  மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல்வாதி கும்பலை எதிர்த்தும் தேசவிரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்த நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்வாதிகள் அனைவரும் மம்தாவுடன் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இவர்களை தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டு கூற வேண்டியதில்லை. நீங்களே அந்த ஊழல் கறைபடிந்த முகங்களின் எண்ணிக்கையை பார்த்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #Megarally #BJPleaders
    சபரிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் கேரள அரசு மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். #BJP #Sabarimala #RamnathKovind
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

    இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.

    இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.

    பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.

    இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர். #BJP #Sabarimala #RamnathKovind 
    பா.ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள மாநில நிர்வாகிகள் 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #CPIM
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.

    விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய அஸ்தி தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #Vajpayee #BJP
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. இந்த அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பா.ஜனதா முடிவு செய்தது. அதன்படி அஸ்தியின் ஒரு பகுதியை ஹரித்வார் கங்கை நதியில் வாஜ்பாய் குடும்பத்தினர் கரைத்தனர்.

    டெல்லியில் அவரது அஸ்தி கலசங்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாநில தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் 7 கலசங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாஜ்பாய் அஸ்தியை தமிழக தலைவர்கள் சென்னை எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞரணி செயலாளர் ஜி.கே.எஸ்., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர். ரதத்தின் முன்பும், பின்பும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அணிவகுத்து வந்தனர்.

    வாஜ்பாய் அஸ்தி நேற்று இரவு 7.20 மணிக்கு கமலாலயம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாரதமாதா சிலையின் கீழே வைக்கப்பட்டது. வாஜ்பாய் அஸ்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், நடிகர் விஜயகுமார், துறைமுகம் பொறுப்புக்கழக உறுப்பினர் பிரகாஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.



    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வாஜ்பாய் வழியில் இந்த தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த அஸ்தியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அஸ்தி கமலாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதில் கட்சி எல்லை, மொழி எல்லை, கொள்கை எல்லை ஆகியவற்றை கடந்து வந்து அஞ்சலி செலுத்தலாம்” என்றார்.

    மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்த அஸ்தி யாத்திரை செல்லும். எந்த மக்களுக்காக வாஜ்பாய் வாழ்ந்தாரோ, அதே மக்களின் தரிசனத்துக்காக அவரது அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.

    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 7 கலசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடுதலாக தஞ்சை காவிரி ஆற்றிலும் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    தேவையற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், பா.ஜனதா தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Minister #jayakumar #ADMK
    சென்னை:

    காமராஜர் பிறந்த தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம், “காமராஜரின் புகழ் நிலைக்க வேண்டும், என்றும் தழைத்தோங்க வேண்டும் என்ற வகையில் அவருக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது” என்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சென்னை விமான நிலையத்தை காமராஜர் விமான நிலையமாக தமிழக அரசு இன்னும் பிரபலப்படுத்தவில்லை என்றும், அவரது பெயரை மிகவும் சிறிய அளவில் போடப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறதே?

    பதில்:- இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே உரிய நேரத்தில் காமராஜரின் புகழ் போற்றி பாதுகாக்கப்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கேள்வி:- ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையம் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறதா?

    பதில்:- ஜெயலலிதா மரணம் குறித்த முரண்பாடுகள் களையப்பட்டு, நாட்டு மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் எந்த நோக்கத்துக்காக போடப்பட்டதோ? அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் அது சென்று கொண்டு இருக்கிறது. அதில் இருந்து எந்த மாறுதலும் இல்லை.

    கேள்வி:- முட்டை விவகாரத்தில் தமிழக மக்களை மொட்டை அடித்துவிட்டார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?



    பதில்:- தமிழகத்தில் 58 லட்சம் மாணவர்கள் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டை நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமான வரித்துறை சோதனை செய்கிறார்கள் என்றால், அதற்கு முட்டை கொள்முதலில் ஊழல் என்று எப்படி சொல்ல முடியும்? எனவே இதில் எந்த விதமான உண்மையும் இல்லை. தேவையில்லாமல் இது போன்ற குற்றச்சாட்டை மாநில அரசு மீது சுமத்துவது மத்தியில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே இதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் என்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    கேள்வி:- மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் மீன்களில் ‘பார்மலின்’ கலந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- இந்த பிரச்சினை வந்த உடன், எல்லா இடங்களிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எங்கேயும் அது போன்று ரசாயனம் கலக்கப்படவில்லை. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் வேண்டுமானால் இருக்கலாம். தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்களில் அதுபோன்று ரசாயனம் கலக்கப்படுவதில்லை. 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தைரியமாக மீன் சாப்பிடலாம். நான் ஏற்கனவே கூறியது போன்று யார் வேண்டுமானாலும் மாதிரி எடுத்து சோதனை செய்து பாருங்கள். ரசாயன கலப்பு இருப்பது தெரியவந்தால் அதற்கு நான் விருது வழங்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    கேள்வி:- தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசு என்று பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்களே?

    பதில்:- இது போன்ற விமர்சனங்களை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஒரு பெரிய இயக்கம். இந்த இயக்கம் மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என்ன கொள்கைகள், லட்சியங்கள் வகுத்து கொடுத்தனரோ! அந்த பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எனவே அப்படி இருக்கின்ற நிலையில், வேண்டும் என்றே அரசியல் உள்நோக்கத்தோடு, இது போன்ற குற்றச்சாட்டுகளை தேவையில்லாமல் சொன்னால், அதற்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். #Minister #jayakumar #ADMK
    ×