search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா தலைமையில் கோமாளிகளும் பொய்யர்களும் கொல்கத்தாவில் திரண்டுள்ளனர் - பாஜக தாக்கு
    X

    மம்தா தலைமையில் கோமாளிகளும் பொய்யர்களும் கொல்கத்தாவில் திரண்டுள்ளனர் - பாஜக தாக்கு

    கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவரும் எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தை கேலி செய்த பா.ஜ.க. இந்தியாவை அழிக்க கோமாளிகளும் பொய்யர்களும் திரண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. #MamataBanerjee #Megarally #BJPleaders
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.



    அவர்களின் பேச்சு வெவ்வேறு தலைப்புகளில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு கணைகளும் பாயத் தொடங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை கேலி செய்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் முகுல் ராய், ‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்காளம் மாநிலம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.

    மறுபடியும் இந்தியாவை அழிக்க பல்வேறு கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களான கலைஞர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும்  மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல்வாதி கும்பலை எதிர்த்தும் தேசவிரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்த நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்வாதிகள் அனைவரும் மம்தாவுடன் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இவர்களை தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டு கூற வேண்டியதில்லை. நீங்களே அந்த ஊழல் கறைபடிந்த முகங்களின் எண்ணிக்கையை பார்த்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #Megarally #BJPleaders
    Next Story
    ×