search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP candidates"

    • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

    • முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த 2ம் தேதி வெளியிட்டது.
    • 2வது கட்டமாக 72 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. 2வது கட்ட பட்டியலை வெளியிட்டது. அதன்படி 72 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.

    இதில், நாக்பூர் மக்களவை தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசலின் ஹமீர்பூர், முன்னாள் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஹவேரியிலும், மத்திய மந்திரி பியூஷ் கோயல் மும்பை வடக்கு ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2-ம் தேதி வெளியான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 பேர் இடம்பெற்றனர். பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார்.
    • தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை அறிவிப்பதை பாரதிய ஜனதா கடைபிடித்து வருகிறது.

    அதன்படி கடந்த 2-ந்தேதி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட பல பிரபலங்கள் அந்த முதல் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியலை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற இருக்கும் வேட்பாளர்கள் பற்றி டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி இறுதி முடிவு எடுக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலம் வாரியாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வைத்து ஆலோசித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    கடந்த முறை முதல் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்ட போது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய ஆலோசனை நடத்தினர். அதுபோல இன்று இரவும் நீண்ட நேரம் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய மந்திரி சபையில் இருக்கும் மந்திரிகளில் சிலர் மேல்சபை எம்.பி.களாக உள்ளனர். அவர்களை இந்த தடவை தேர்தலில் போட்டியிட வைப்பது பற்றி இன்று நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை எந்த தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    2-வது பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் 150 பேர் வரை இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பெரும்பாலான வேட்பாளர்கள் பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் பா.ஜ.க.வுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் வேட்பாளர்கள் அறிவிப்பு சற்று தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    2-வது வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி, அஸ்வினி சவ்பே, ஆர்.கே.சிங், நித்தியானந்தாராய் ஆகியோர் பெயர்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குஜராத், மத்திய பிரதேசம், பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட வேட்பாளர் தேர்வு பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற சிலர் போட்டியிட தயக்கம் காட்டினார்கள். சில வேட்பாளர்கள் மீது சர்ச்சை எழுந்தது. எனவே அத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரையும் இன்று அலசி ஆராய உள்ளனர்.

    குறிப்பாக இன்று வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் பின்னணியில் எந்தவித சர்ச்சையும் இருக்க கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 39 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திடம் கொடுத்து இருக்கிறார். இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    அவர் முன்னிலையில் 39 தொகுதி வேட்பாளர்கள் பற்றி அலசி ஆராயப்பட உள்ளது. அதில் 7 அல்லது 8 தொகுதி வேட்பாளர்கள் பெயர் விவரம் 2-வது பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது. எனவே தமிழகத்தில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது.

    மேலும் 2-வது வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை இன கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.

    இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

    மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


    டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • பாஜக எம்.பி உபேந்திர சிங் ரவாத், வெளியான ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக எம்.பி., உபேந்திர சிங் ராவத், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் உடன் உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அறிவுறுத்தலால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது

    ஆனாலும், பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத், அந்த ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் DeepFake AI தொழில்நுட்பத்தால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், நேற்று மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

    பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதி தேர்தலில் போட்டியிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதில் மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    "பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அதனால் தான், பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது X பக்கத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில், போஜ்புரி நடிகரான பவான் சிங் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.


    • வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு.
    • உ.பி.யில் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி- வாரணாசி, அமித்ஷா- காந்தி நகர், மன்சுக் மாண்டவியா- போர்பந்தர், அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜூஜூ, பன்சுரி ஸ்வராஜ்- புதுடெல்லி, அர்ஜூன் முண்டா- குந்தி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்

    அஸ்வினி- காசர்கோடு, கேரளா, நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர், அப்துல் சலாம்- மலப்புரம், கேரளா, மத்திய அமைச்சர் சந்திர சேகர்- திருவனந்தபுரம், கேரளா, மத்திய அமைச்சர் முரளிதரன்- ஆட்டிங்கால், கேரளா ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- குணா, மத்திய பிரதேசம், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்- விதிஷா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    • சிவமொக்கா நகர் தொகுதியில் ஈசுவரப்பாவின் மகன் காந்தேசுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.
    • ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளுக்கும் பா.ஜனதா முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. சிவமொக்கா நகர், மான்வி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    சிவமொக்கா நகர் தொகுதியில் சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த தலைவர் ஈசுவரப்பா, தனது மகன் காந்தேசுக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.

    வேட்புமனு தாக்கலுக்கு இன்று ஒரு நாளே உள்ள நிலையில், கடைசி 2 தொகுதிகளுக்கும் பாஜக நேற்று இரவு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இதில், சிவமொக்கா நகர் தொகுதியில் ஈசுவரப்பாவின் மகன் காந்தேசுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    சிவமொக்கா நகர் தொகுதியில் சன்னபசப்பா, மான்வி தொகுதியில் பி.வி.நாயக் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளுக்கும் பா.ஜனதா முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.

    7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.



    ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.

    ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது. #Loksabhaelections2019 #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் பா.ஜனதாவும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    நாடு முழுவதும் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த 1999-ம் ஆண்டு 339 தொகுதிகளில் போட்டியிட்டது. 2004-ம் ஆண்டு 364 தொகுதிகளில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு 433 தொகுதிகளில் போட்டியிட்டது.

    2014-ம் ஆண்டு 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆண்டு அதையும் விட அதிகமாக வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இதுவரை பா.ஜனதா சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

    பா.ஜனதா இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும்.

    பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அந்த 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. உத்தரபிரதேசத்திலும் இன்னும் 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

    அதுபோல மத்திய பிரதேசத்திலும் மிக முக்கிய தொகுதிகளான இந்தூர், போபால் உள்பட 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. பஞ்சாபில்-3, அரியானாவில்-2, ராஜஸ்தானில் ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி அமையாததால் பா.ஜனதா கட்சி அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால்தான் இந்த தடவை பா.ஜனதா வேட்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. #Loksabhaelections2019 #BJP
    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர் இந்திய அரசியலில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

    இவ்வாறு குற்றவாளிகள் அரசியலில் பதவிகளை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    நாட்டில் உள்ள பல கட்சிகளும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பல கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளராக அறிவித்து உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியிலும் கூட இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர்.

    தற்போது பாரதிய ஜனதா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்களில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 184 பேரில் 78 பேர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆவர்.

    ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு அடிப்படையில் இந்த 78 பேரில் யார்-யார்? கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன் படிதான் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    மற்ற 106 பேரில் யார்-யார் கிரிமினல் குற்றவாளிகள் என்பது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தான் தெரிய வரும்.

    35 பேரில் மராட்டிய மாநிலம் சந்திரபூர் தொகுதியில் போட்டியிடும் ஹன்ஸ் ராஜ் கங்காராம் மீதுதான் அதிக வழக்கு உள்ளது. அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஹன்ஸ் ராஜ் கங்காராம் தற்போது மத்திய உள்துறை இணை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீது 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தலைவர் சாக்‌ஷி மகராஜ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் வெற்றி பெற்ற 282 பேரில் 98 பேர் மீதும், காங்கிரசில் வெற்றி பெற்ற 44 பேரில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. #LSPolls #BJP #BJPCandidates
    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் நிற்கிறது. இதற்கு சீட் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதற்கும் பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.



    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP

    ×