search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சியில் டிரைவர் -கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் 2019-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். இதன் பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.

    இதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி கோர்ட்டை நாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியிரில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜூன் 21-ந்தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பின்னர் அங்கேயே நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜூலை மாதம் 18-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டாக சிறையிலேயே இருந்து வருகிறார்.

    செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி ஜாமின் மறு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வின்போது வினாத்தாள் லீக்கானதாக குற்றச்சாட்டு.
    • தேர்வு முடிவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.

    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின்போது பேப்பர் லீக்கானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரிசல்ட் வெளியானபோது 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்ணும், 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.

    இதனால் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தேசிய தேர்வு முகமை முறைகேடு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தது. மத்திய அரசும் பேப்பர் லீக்கானதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றது.

    என்றபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பான பொதுநல வழக்கு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 8-ந்தேதி நீதிமன்றம் நடைமுறைகள் தொடங்க இருக்கிறது.

    மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நேற்று, உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
    • தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    சென்னை:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியது. தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது.

    இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடந்தது.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும் போது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம்.

    அந்த மாணவர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 30-ந்தேதி அறிவிக்கப்படும்.

    தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர். தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாத வாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தேசிய தேர்வு முகமை நம்பகமான அமைப்பாகும். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அதன் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந்தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, நீதிபதிகள், தேர்வை நடத்தக்கோருவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது.
    • YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்தார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.

    இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்

    இதனையடுத்து, ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய தடை விதித்த ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

    மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. கடந்த மே 14-ந்தேதி முதல் மே 29 வரையிலான 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.

    அவரது மனுவில், "தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது.

    இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    • மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (மே 28) உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை நடப்பதற்கு முன்னதாகவே கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்து அவர் மீண்டும் சிறை செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

     

    • வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் முரண்பாடு என விமர்சனம்.
    • தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை மாற்றியதாக கட்சிகள் விமர்சனம் செய்தன.

    மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரியவந்தது. மேலும், முதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் எனத் தெரிவித்தனர். பின்னர் பதிவான வாக்கு சதவீதம் அதிகரித்து வெளியிடப்பட்டது.

    இதனால் 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என என்ஜிஓ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக் வந்தது. அப்போது நீதிபதிகள் "ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிடமுடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும்.

    தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். அமைப்பு (தேர்தல் ஆணையம்) மீது கொஞ்ச் நம்பிக்கை வைப்போம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • ஜூன் 2-ந்தேதி சரணடைந்து ஜெயிலுக்கு போக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா அடங்கிய பெஞ்ச் "விவாதங்கள் கேட்கப்பட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ந்தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம்.
    • எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது.

    இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.

    நான் மீண்டும் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில் "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம். அதைப்பற்றி நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது. இது நீதிமன்றம் உத்தரவு. நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படுகிறோம்.

    எங்களுடைய முடிவு குறித்த விமர்சனத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் செல்லவில்லை. எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்கியதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

    ×