என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "interim bail"
- அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
- டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம வாங்கியபோது கைது.
- கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது, சாட்சியங்களை அழிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.
- லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சிலருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
இந்த நிலையில் ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளனர். #KhaledaZia #Bangladesh
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா (52) கைது செய்யப்பட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை திங்கட்கிழமை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து பெண் என்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரி கவிதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து திங்கள்கிழமை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் அனிசா பத்ரா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அனிசாவை அவரது கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்தியதாக அனிசாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அனிசாவின் தற்கொலை தொடர்பாக எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என மாயங் சிங்வியின் பெற்றோர் சுஷ்மா சிங்வி, ஆர்.எஸ் சிங்வி ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாயங் சிங்வியின் பெற்றோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் ஜாமீன் கோரியது குறித்து டெல்லி போலீசார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தனர். #DelhiHC
சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதிசெய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்