search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi patiala house court"

    ரூ.3,600 கோடி மதிப்புள்ள விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் தொடர்பாக துபாயில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவை ஜாமினில் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. #AgustaWestlandcase #RajeevSaxena #RajeevSaxenabail #VVIPChopper
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

    இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இதில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

    இந்த குற்றபத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய்வாழ் இந்திய தொழிலதிபரான ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், ராஜீவ் சக்சேனாவுக்கு ஜாமின் அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். 

    ஜாமினில் செல்லும் ராஜீவ் சக்சேனாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிபதியிடம் வலியுறுத்தியதால் ராஜீவ் சக்சேனாவுக்கு ஆயுதமேந்திய மூன்று பாதுகாவலர்கள் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்க நீதிபதி அனுமதி அளித்தார். #AgustaWestlandcase #RajeevSaxena #RajeevSaxenabail #VVIPChopper
    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.


     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

    இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனின் நீதிமன்ற காவல் இன்று மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. #AshishPandey #DelhiHyattRegency
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து,  இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேச மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில்  இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.


    ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இந்நிலையில், இன்று ஆஷிஷ் பான்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். அவரது காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #AshishPandey  #DelhiHyattRegency #PatialaHouseCourt #judicialcustody
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனை 22-ம் தேதி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. #AshishPandey #DelhiHyattRegency
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைதொடர்ந்து,  இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில்  இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.

    ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். #AshishPandey  #DelhiHyattRegency
     
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த்குமார் அமர்விலிருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. #TwoLeaves
    சென்னை:

    இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் தற்போது வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு விசாரித்து வந்தது.

    இந்தநிலையில் தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது அரவிந்த் குமார் அமர்வில் இருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TwoLeaves
    சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் சசிதரூர் வெளிநாடு செல்வதற்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் மர்மமான முறையில் விடுதி அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக சசிதரூர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளார். 

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர். பிணைத்தொகையாக ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். #ShashiTharoor #SunandaPushkar
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase #CBI
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் 2ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கான பங்குகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.


    இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

    ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
    ×