என் மலர்
நீங்கள் தேடியது "plea"
- சங்க கட்டிட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலம் நீட்டிப்பு.
- வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி நீடிப்பு மற்றும் தேர்தல் நடத்தக்கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் " சங்க கட்டிட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது; பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ளது.
- மனுவில் உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார சிறையில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் காரணமாக ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் 1ம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உடல்நலம் காரணம் காட்டி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், 3 வாரத்துக்குள் பதில் அளிக்கப்பட்டவுடன், அடுத்த 4 வார காலத்துக்குள் அதனை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர். #ADMK #DelhiHighCourt
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர். #BombayHighCourt #AbuSalem #tamilnews
மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் நீட் தேர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர்.
நீட் தேர்வில் அதிகமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் சிரமத்தை சந்தித்தனர். மேலும், தேர்வறைக்கு செல்லும் போது நடைபெறும் பலகட்ட சோதனைகளும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.
நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசோ அதனை கண்டுகொள்ளாமல் வருடந்தோறும் தேர்வை தவறாமல் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே இன்று வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்சியின் அறிவிப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பலர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக ஜூலை 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NEETissue #upperagelimit

கர்நாடகாவில் நாளை மறுநாள் (12-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க, பெங்களூரு நகருக்கென தனித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், ராஷ்டிரிய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது எனவும், இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, தேசிய கட்சிகளின் பட்டியலிலிருந்து காங்கிரசை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தேர்தல் பணிகள் துவங்கிய பின்னர், நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும் தேர்தல் நடைமுறைகள் முடிந்தபிறகு, முத்தலிக் சட்டரீதியாக நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress






