என் மலர்
செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
புதுடெல்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
Next Story






