search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பி.சி.ஓ.எஸ். பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
    • மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டும்.

    பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    முகப்பரு

    அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி)

    கூந்தல் உதிர்வு

    தோல் நிறம் மாறுதல்

    உடல் எடை அதிகரிப்பு

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

    பி.சி.ஒ.எஸ் (PCOS or PCOD) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

    • வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.
    • இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன்.

    இதயத்தில் வால்வுகள் மொத்தம் நான்கு. மைட்ரல் மற்றும் டிரைகஸ்பிட் ஆகியவை இடது மற்றும் வலது ஏட்ரியம் என்கிற அறைகளில் இருந்து வென்டிரிக்கிள் என்கிற அறைகளுக்கு ரத்தத்தை அனுப்புகின்றன.

    அதேபோல அயோர்ட்டிக் மற்றும் பல்மனரி வால்வுகள் இடது மற்றும் வலது வென்டிரிக்கிள்களில் இருந்து மகாதமனிக்கும், பல்மனரி தமனிக்கும் ரத்தத்தை அனுப்புகின்றன. வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.

    வால்வுகளில் இருவகை கோளாறுகள் வரும். ஒன்று அவை சுருங்கி விடும். அல்லது சரியாக மூடாமல் ரத்தத்தை சரியாக அனுப்பாது. இரண்டு வகைக் கோளாறுகளிலும் ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் போட்டு சமாளிக்கலாம். அதிகமானால் வால்வு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

    ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன் என்பது, சேதம் அடைந்த இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஆகும். இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளுக்கும் இதை செய்யலாம்.

    இதய வால்வில் உள்ள சேதத்தின் தன்மை, நோய்க்கான காரணம் மற்றும் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப இந்த சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.

    நோயாளியின் இதய வால்வு ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷனுக்கு உகந்ததா என்பதை தீர்மானிக்க எக்கோகார்டியோகிராம், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகள் உதவுகின்றன.

    இதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடும்போது, பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. சிறிய அளவிலான இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு மிகப்பெரிய அளவில் அறுவைசிகிச்சை இன்றி, சிறு துளையிட்டு, ரத்த நாளம் வழியே கருவியைச் செலுத்தி, அடைப்பை நீக்கும் முறைதான் இன்டர்வென்ஷனால் கார்டியாலஜி சிகிச்சை. இந்த சிகிச்சை இரண்டு கட்டமாகச் செய்யப் படுகிறது. முதலில், இதயக் குழாய் அடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது எனக் கண்டுபிடித்து, தொடை அல்லது கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே கருவியைச் செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இதில், பல சிகிச்சை முறைகள் உள்ளன.

    இந்த சிகிச்சையை தேர்வு செய்யும் முன், இதனால் ஏற்படும் தொலைநோக்கு பலன், பக்கவிளைவுகள், உயிர் ஆபத்து, செலவு, நோயாளியின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எது பலன் தருமோ, அந்த சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

    இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை:

    * புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிடவேண்டும்.

    * காலை ஜாகிங், நடைப்பயிற்சி, வார்ம்அப் பயிற்சிகள்.

    * யோகா, பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தினமும் அதிகாலையில் செய்ய வேண்டும்.

    * வேகவைத்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * 'ரெட் மீட்' எனப்படும் அதீதக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள ஆடு, மாட்டு இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

    * எண்ணெயில் பொரித்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    • பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
    • கண்டங்கத்தரி பழங்கள், தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை.

    கத்திரிக்காய் வகைகளில் ஒன்றுதான் இந்த கண்டங்கத்திரி. கண்டங்கத்திரியில் அல்கலாய்ட்ஸ், கிளைகோசைட்ஸ், சாப்போனின்ஸ், பிளாவினாய்ட்ஸ், சோலாசொடின், கவுமாரின் போன்றவை உள்ளன. இதில் நோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே சித்தமருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

    கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.

    பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

    ஒடிசாவில் உள்ள தென்கனல் மாவட்டத்தை சேர்ந்த குந்த் பழங்குடியினத்தவர்கள் இந்த பழத்தின் டிகாஷனை, சர்க்கரை நோய்க்கு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்துகின்றனர். எனினும் இதன் ரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் குறித்து பெரிய மருத்துவ ஆராய்ச்சிகளோ அல்லது மருத்துவ ஆய்விதழ் வெளியீடுகளோ இதுவரை இல்லை.

    இதில் உள்ள அல்கலாய்ட்ஸ் தன்னுடல் தாக்குநோய் (ஆட்டோ இம்யூன் நோய்) மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். மேலும், அதிகமான அளவு உட்கொள்ளும்போது இதில் உள்ள சோலானின் ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உணவு நஞ்சாதல் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    ஆகையால் உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கண்டங்கத்திரியை மட்டுமே சார்ந்திருக்காமல் அலோபதி மருத்துவ முறையை பின்பற்றலாம். உங்கள் தற்போதைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரியை (எச்.பி. ஏ1சி) பரிசோதித்து, ரத்த சர்க்கரை கட்டுக்குள் உள்ளதா என்பதை கண்டறிந்து, அருகில் உள்ள மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்தலாம்.

    • நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
    • இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.

    நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.

    100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளில் அவர்கள் என்ன ரகசியங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

    தாவர உணவுகள்

    உலகில் நீண்டகால வாழ்வதற்கு அவர்கள் தாவரங்கள் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். பீன்ஸ், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக கருதுகிறார்கள்.

    ஆட்டுப்பால்

    இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாட்டுப்பால் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக செம்மறி ஆட்டுப்பால் குடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    மீன்

    இங்குள்ள மக்கள் தினசரி உணவுகளில் மீன் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உணவுகளை உண்கின்றனர்.

    பால் பொருட்களை தவிர்த்தல்

    மேலும் அவர்கள் பாலை குடிப்பதில்லை. குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், கிரீம், வெண்ணை, வெண்ணை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை. தவிர்த்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீன்ஸ்

    தினமும் குறைந்தது அரை கப் அளவிற்காவது வேகவைத்த பீன்ஸை எடுத்துக்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் ஒரு மணிதன் தினமும் 20 கிராம் பீன்சையாவது எடுத்துக்கொள்வது, அவர்களை இறக்கும் அபாயங்களில் இருந்து 8 சதவீதம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    100 வயதை கடந்தவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் 90 சதவீதம் வரை அவர்களின் வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வளரும். இதனால் உணவு சமைப்பது எளிது. கிழங்குகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றனர். தானியங்களை அரைத்து பின்னர் சமைத்து சாப்பிடுகின்றனர்.

    2002 முதல் அமெரிக்கர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிட்டவர்கள் என்று கணித்துள்ளது. 

    • டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும்.
    • பசலைக்கீரை ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

     பூண்டு

    பூண்டில் இருக்கும் அல்லிசின் திருமணமான ஒவ்வொரு ஆண்களுக்கும் அவசியமான ஒன்று. ஏனென்றால் இந்த பொருள் தான் ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு ரத்த ஓட்டட்தை அதிகரிக்க உதவுகிறது. இதுதான் பாலியல் வாழ்க்கைக்கு சிறப்பாக அமையும்.

    சாக்லேட்

    சாக்லேட்டி டோபமைன் உள்ளது. உடலில் டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும். மற்றும் அவர்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மன அழுத்தமின்றி இருப்பார்கள்.

    வாழைப்பழம்

    திருமணமான ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைக்கிறது. இது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாகவும், வலிமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. பாலுணர்வை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

    பசலைக்கீரை

    பசலைக்கீரையில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

    கடல்சிப்பிகள்

    கடல் சிப்பிகளில் துத்தநாகம் மற்றும் ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக் கூடியது. மேலும் கடல் சிப்பி உணவுகளும் காதல் ஹார்மோன்களை அதிகரிக்கக்கூடியவை.

    மாதுளை

    பழங்களில் மாதுளைப்பழம் எல்லோருக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றன. மேலும் மாதுளை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும்.
    • உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சில காரணங்களால், பெண்கள் மாதவிடாயை முன்னரே சந்திக்க நினைப்பர். இந்த நேரங்களில் மருந்து, மாத்திரைகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும். இதில், மாதவிடாய் காலம் சீக்கிரம் வர பெண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    இஞ்சி டீ

    மாதவிடாய் காலத்தை நெருங்குவதற்கு இஞ்சி டீ ஒரு அற்புதமான தேர்வு ஆகும். ஏனென்றால் இஞ்சி டீ கருப்பையை சுற்றி அதிக வெப்பத்தை உண்டுபண்ணுகிறது. இதனால் மாதவிடாய் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    எள்

    உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எள்ளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மாதவிடாய் விரைவில் வருவதற்கு ஏதுவாக அமைகிறது.

    வைட்டமின் சி பழங்கள்

    வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களான பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்கள் அடங்கும். பப்பாளி பழமானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடிய கரோட்டின் பழமாகும். இந்த பழங்களை உட்கொள்வதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும்.

    கொத்தமல்லி விதை

    கொத்தமல்லி டீ அருந்துவதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும். தேவையான அளவு கொத்தமல்லி விதைகளை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து நன்கு ஆறிய பிறகு அருந்த வேண்டும்.

    பீட்ருட்

    பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மாதவிடாயைத் தூண்டக்கூடிய வகையில், பீட்ரூட் பழம் அமைகிறது.

    மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், மாதவிடாக் காலத்திற்கு முன்னதாகவே அதனை நெருங்க முடியும்.

    • யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
    • சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது.

    யோகா செய்வது ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் தோரணையை மேம்படுத்துதல், அத்துடன் மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தருகிறது.

    உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆகியவை உடற்தகுதியின் முக்கிய கூறுகளாகும். இதன் விளைவாக, யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

    அந்த வகையில் உங்கள் காலை உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் ஏதாவது சாப்பிடுவது அவசியம். அதே சமயம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய, அந்த உணவானது இலகுவாகவும் அதிக கனமாகவும் இருக்கக்கூடாது. நாம் நம் நாளைத் தொடங்குவதற்கு முன், நம் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுக்க வேண்டும்.

    உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய ஒரு பேரிச்சம் பழம் அல்லது பழங்கள் போதுமானதாக இருக்கும். மறுபுறம், உள்ளிருந்து நீங்கள் கட்டுப்படுத்தும் சுவாசத்தை சீர்குலைக்காமல் இருக்க, யோகாவை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது. யோகா செய்வதால் தன்னம்பிகை மற்றும் சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். மேலும் யோகா செய்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். யோகா செய்வதால் நியாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க முடியும். 

    • தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
    • நமது மூளையில் சூப்பர் கிளாக் என்ற ஒரு பொருள் உள்ளது.

    இன்றைய உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதிலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் இரவுநேர வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிகொட்டுதலில் தொடங்கி, ஹார்மோன் மாற்றம், ஸ்கின் பிராப்லம்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது குறித்த பதிவுகள் உங்களுக்காக...

    இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். நமது மூளையில் சூப்பர் கிளாக் (suprachiasmatic nucles) என்ற ஒரு பொருள் உள்ளது. அது ஹைப்போதாலமஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இது சூப்பர் கிளாக் கொடுக்கும் சிக்னல் மூலமாகத்தான் ஹார்மோன்ஸ் மற்றும் அனைத்து சிஸ்டமும் வேலை செய்கிறது. இந்த சூப்பர் கிளாக்குக்கான பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...? சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்துதான். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்து தான் செரோட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

    இந்த சூப்பர் கிளாக்குக்கு சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்காமல் உடலுக்கு கொடுக்கும் செயற்கையான வெளிச்சத்தால் உடலுக்கு எந்த சிக்னலும் கிடைக்காமல் போய்விடுகிறது.

    எனவே உங்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் இந்த சூப்பர் கிளாக்குக்கு சரியான சிக்னல் கிடைக்காது. இதனால் அந்த ஹார்மோன்கள் வேலை செய்யாது. சரியான சிக்னல் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் சர்க்காடியன் ரிதம் ஹார்மோன் (circadian rhythm) வேலை செய்யாது.

    இதனால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பிரச்சினை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை வர அதிக வாய்ப்பு உள்ளது.

    எனவே இவ்வளவு துல்லியமாக வேலை செய்யும் சூப்பர் கிளாக்குக்கு மதிப்பளித்து இரவு 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

    • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்துதான் கிடைக்கிறது.
    • விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும்.

    நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை நிதானமாகவும், ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

    நம்மில் சிலர் நேரம் போய்விட்டது என்று நினைத்து அவசர அவசரமாக சாப்பிடுவது வழக்கம். உண்மையில் அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும். அந்தவகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    வயிறு உப்புதல், வாய் துர்நாற்றம், மலச்சிக்கல், நாக்கில் மாவு படிதல், செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல், உண்ட மயக்கம் இதுபோன்ற விளைவுகள் அவசர அவசரமாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும் என்பதால் இந்த வகையான பிரச்சினைகள் வரும்.

    எனவே உணவை சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணம் போட்டு பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு தான் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நாம் பிரியாணியை மட்டும் எப்படி நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமோ அதேபோன்று சாப்பிட வேண்டும்.

    ஏனென்றால் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.

    வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

    வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வந்தது. குறிப்பாக வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

    வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது. 

    • உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
    • மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.

    இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

    மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

    மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.

    அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.

    • தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை.
    • தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் அற்புதமான விஷயம் என்னவென்றால் தாய்மை தான். அந்த தாய்மையை போற்றும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந்தேதி (இன்று) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனாலும் தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பெண்களுக்கு சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் முன்பு உள்ள காலம்போல் இல்லாமல் தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது. அதனை சிலர் அறியாமை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் அறியாமல் உள்ளனர். அதிலும் சில பெண்கள் பயத்தின் காரணமாக தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். அடுத்து தவறான புரிதல்களினாலும் குழப்பத்தில் டாக்டரிடம் செல்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

    அதை விடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை டாக்டரிடம் எடுத்துக்கூறினால் ஆரம்பத்திலேயே அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய ஏதுவாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயதுவரம்பை பொறுத்துதான், கர்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி அடையும். வயது அதிகமாகும் போது பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கும். இதன் காரணமாகவும் தாய்மையும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

    எனவே, டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இனியும் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது. ஏனென்றால் கருமுட்டை வளர்ச்சி அடையாத பெண்களுக்கு கூட தற்போது ஐவிஎப் (IVF)முறையில் கருமுட்டை செலுத்தி தாய்மை அடையச்செய்யும் வசதிகள் உள்ளன.

    தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான கால கட்டம். பெருமைமிக்க பெற்றோராக மாறி இந்த உலகத்திற்கு புதிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது அவசியம். எனவே திருமணமான பெண்கள் ஒருவருடம் மட்டுமே தாய்மைக்காக காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது.

    ×