search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடை அதிகரிப்பு"

    • சிப்ஸ் குழந்தைகளை அதிகம் கவர்கிறது.
    • சிப்ஸ் கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள்.

    கவர்ச்சிகரமான 'பேக்கிங்'கில், மொறு மொறு சுவையுடன் வரும் 'சிப்ஸ்',' குழந்தைகளை அதிகம் கவர்கிறது. பிள்ளைகள் நச்சரிக்கிறார்கள் என்று பெற்றோரும் அவர்களுக்கு அடிக்கடி 'சிப்ஸ்' வாங்கி கொடுக்கிறார்கள். இது சரியா? அடிக்கடி 'சிப்ஸ்' கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று தெரியுமா?

    பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரெஷ்சாக இருக்க அதில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    மேலும், 'சிப்ஸ்' தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    சிப்சில் உள்ள டிரான்ஸ் பேட், கொலஸ்டிராலை அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.

    அதுமட்டுமின்றி சிப்ஸ், உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளின் எடை கூடும். உடல் பருமன் பிரச்சினை உண்டாகும்.

     அதுபோல் சிப்சில் கலோரிகள் அதிகம். எனவே இதை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதோடு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கலாம், இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

    முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்துக்கு உள்ளாகலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சினையை உண்டாக்கலாம்.

    அதுபோல குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம்.

    இவ்வளவு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய சிப்சை நமது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாமா என்று அடுத்தமுறை ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்திடுங்கள்.

    • எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.
    • உடற்பயிற்சி செய்வது நல்லது.

    ஒரு பெண்ணுடைய சராசரி எடையை காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

    நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிடு' என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம்தாய்மார்கள் சாப்பிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

    அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.

    தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

    'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்.

    ''கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை' என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை.

    எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது. மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை.

     எடை குறைப்பதற்கான வழிகள்:

    சாப்பாடு

    குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

    தண்ணீர் குடியுங்கள்

    உடலின் நீர் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.

    கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்

    உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

    தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

    தூக்கம்

    இரவு நேரத்தில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.

    பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்கு காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.

    ×