search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவிடாய் காலம்"

    • போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
    • துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மாதவிடாய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, கை-கால் வலி போன்ற பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். உடலில் ஒருவித சோர்வும் குடிகொள்ளும். சிலருக்கு முகப்பருக்கள் வெளிப்பட தொடங்கும். திடீர் கோபம், எரிச்சல், கவனக்குறைவு, மன அழுத்தம் ஏற்படக்கூடும். தூக்கமும் தடைபடும். இதுபோன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கிவிட்டாலே சுமூகமாக சமாளித்து விடலாம். அதிலும் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய், காரமான மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

    * மாதவிடாய் சமயங்களில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவை பிரித்து நான்கு அல்லது ஐந்து வேளையாக சாப்பிடலாம்.

    * இஞ்சி டீ பருகுவது வலியை கட்டுப்படுத்த உதவும். ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும். மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

    * மாதவிடாய் சமயத்தில் புராக்கோலி, தக்காளி, சோளம், ஆரஞ்சு பழம், வேர்க்கடலை போன்றவைகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

    * வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அவைகளை சாப்பிடுவது மனநிலையை தெளிவாக்கும். குடல் இயக்கத்திற்கும் நன்மை சேர்க்கும்.

    * போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளையும் செய்து வரலாம்.

    • மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும்.
    • அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர்.

    பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், பூப்படைந்ததிலிருந்தே அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் அல்லது சில காலமாகவே அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் 'இது இயல்பானதுதான்' என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம் எனவும், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர். இவ்வளவு ரத்தம் வெளியேறுவது இயல்பானது அல்லது அதனை தாண்டினால் அதீத ரத்தப்போக்கு என்பதற்கு வரையறை கிடையாது. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். சிலர் நாப்கின்கள் சிறிது நனைந்தாலும் மாற்றிவிடுவார்கள், அதுவல்ல அதீத ரத்தப்போக்கு. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான்.

    சிலருக்கு கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதிக்குள் இருந்தால் அதன் சவ்வு பெரிதாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ச்சியாக ஒருவருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்படுகிறதென்றால், அதனால் அவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படும். ஏனெனில், அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். உடல் சோர்வு, பணிகளை சரிவர செய்ய முடியாதது உள்ளிட்டவை ஏற்படும்.

    பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளுக்கு உணவின் மூலம் உடல் எடையை சரியான அளவில் வைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். அப்போது, இந்த அதீத ரத்தப்போக்கு பிரச்னையும் சரியாகும். இரும்புச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் வகைகள், மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகளை உணவின் மூலம் சரிசெய்ய முடியாது.

    • பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
    • சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம்.

    பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம், சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு வலியும் ஏற்படலாம். அந்த காலங்களில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளானார். இன்றும் பல பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை காரணம் சமூகத்தில் மாதவிடாய் பற்றி பேச நிறைய தடைகள் உள்ளன. எனவே, உங்களுக்காக மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும் மாதவிடாய் காலத்தில் நம்மை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நீண்ட நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்ற வேண்டும். ஒரு டேம்பானை 8 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

    தற்போது சந்தைக்கு புதிதாக வந்துள்ளது டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ். இந்த வகை பெண்களுக்கு மிகவும் ஏற்றது. அவர்கள் பயணங்கள் மேற்கொள்ளும் போதும், இரவு நேர தூக்கத்தின் போது இந்த பேண்டீஸ் உங்களுக்கு ஏற்றது.

    பீரியட் உள்ளாடை அல்லது பீரியட் பேண்டி குறிப்பாக மாதவிடாய் ஓட்டத்தை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரத்யேக துணி மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சி சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்கும். துணியில் உள்ள இழைகள் திரவத்தை பூட்டி, கசிவு மற்றும் துணிகளை கறைப்படுத்துவதைத் தடுக்கிறது. அவை துர்நாற்றத்தையும் தடுக்கின்றன.

    சந்தையில் புதிதாக வெளியாகி உள்ள டிஸ்போசபிள் பீரியட் உள்ளாடை சௌகரியமாகவும் கவலையற்ற கால அனுபவத்தை அளிப்பதற்கும் உறுதி செய்கிறது. இந்த புதுமையான தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, வசதியானவையும் கூட. மற்றும் கசிவு இல்லாதவை. உங்கள் ஆன்ட் ஃப்ளோவின் வருகையை இனிமையாக்க சிறந்த காலுறைகளை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

    ×