search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம்"

    • சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.

    மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி விஷம் குடித்தார்
    • அய்யா பழம் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர் ணிமடம் கேசவ திருப்பாபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் அய்யாபழம் (வயது 58).

    இவரது மனைவி சரஸ்வதி (54). இவரது மகள் சரண்யா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மனம் உடைந்து காணப்பட்டார். அதன்பிறகு யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சரஸ்வதியை சமாதானம் செய்தனர். இதையடுத்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி விஷம் குடித்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் சம்பவத் தன்று சரஸ்வதியின் மகனும் கணவரும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்தார். அப்போது அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    வேலைக்கு சென்ற மகன் வீட்டிற்கு வந்தபோது சரஸ்வதி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பல னின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அய்யா பழம் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • பாண்டியனுக்கும் வாஞ்சிநாதனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது68) விவசாயி. இவருக்கும், இவரது மகன் வாஞ்சிநாதன்(39) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் சிறப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது.
    • மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் தற்போது அதிகளவில் வலைகளில் சிக்கி வருகிறது.

    இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. பலாசி மீன்கள் விலை போகாததால் அவைகளை கரையோரம் வீசி விடுவார்கள். இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிதித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    இதை அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

    கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி யசோதை. கடந்த ஒரு மாதமாக பழனிசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மனைவி யசோதை 100 நாள் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். மனவிரக்தியில் இருந்த பழனிசாமி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து யசோதை கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
    • பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.

    மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.

    பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 முதியவர்கள் இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வர் அழகர்சாமி (வயது70). இவரது மனைவி ராம லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

    இதனால் அழகர்சாமி மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கள்ளிக்குடியை அடுத்து ள்ள சோளம்பட்டியை சேர்ந்த வர் ராஜூ (62). இவரது மனைவி பாண்டி யம்மாள்.

    இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜூ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
    • கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டி அருகே நெய்க்கார பட்டியை அடுத்த இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகனுடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக, சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

    சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் ஆயுதங்கள் ஏந்தி சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் 36 நாட்கள் தப்புவதற்கு உதவியாக இருந்தவர் அவதார்சிங் கண்டா.

    அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான இவர் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய காலிஸ் தான் விடுதலை படையின் தலைவராக இருந்து வந்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமரியாதை செய்ததோடு காலிஸ்தான் கொடியையும் ஏற்ற முயன்றனர்.

    இந்த போராட்டத்தில் அவதார் சிங் கண்டா முக்கிய பங்காற்றினார். இவர் சமீப காலமாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதார் சிங் கண்டா நேற்று இறந்தார்.

    திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவதார் சிங் கண்டா சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இறந்த அவதார்சிங் கண்டா வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சீக்கிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வெடிகுண்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களுள் மிக முக்கியமானதாக இவர் விளங்கி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற அவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பொன்சிவா (வயது 25). இவர் அங்குள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கிழக்கு தெரு உள்ள அம்மன் கோவிலில் 2 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் பொன் சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைஅவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்சிவா விஷம்குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் சிவா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸ்நிலையத்தில் பொன்சிவாவின் தாய்மாமன் இருளப்பன் கொடுத்த புகாரின் போரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×