search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை பிரிந்து வாழ்ந்த முதியவர் விஷம் குடித்து சாவு
    X

    மனைவியை பிரிந்து வாழ்ந்த முதியவர் விஷம் குடித்து சாவு

    • இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
    • கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டி அருகே நெய்க்கார பட்டியை அடுத்த இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகனுடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக, சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×