search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old people"

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 முதியவர்கள் இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வர் அழகர்சாமி (வயது70). இவரது மனைவி ராம லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

    இதனால் அழகர்சாமி மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கள்ளிக்குடியை அடுத்து ள்ள சோளம்பட்டியை சேர்ந்த வர் ராஜூ (62). இவரது மனைவி பாண்டி யம்மாள்.

    இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜூ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×