search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பொன்சிவா (வயது 25). இவர் அங்குள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கிழக்கு தெரு உள்ள அம்மன் கோவிலில் 2 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் பொன் சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைஅவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்சிவா விஷம்குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் சிவா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸ்நிலையத்தில் பொன்சிவாவின் தாய்மாமன் இருளப்பன் கொடுத்த புகாரின் போரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×