search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலை"

    • கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.
    • கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் பைரவபாலம் ஆற்றில் தினமும் மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று மீனவர்கள் வலையில் 24½ கிலோ எடையுள்ள மீன் ஒன்று சிக்கியது.

    இந்த மீன் ஏனாம் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த ராட்சத மீன் ரூ.17,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீனிற்கு முதுகுத்தண்டு தவிர அதிக முட்கள் கிடையாது.

    அதனால் பெரும்பாலானோர் விரும்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கோதாவரி ஆற்றில் 20 கிலோ எடை வரை வளரும் மீன்கள். கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.

    கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

    ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த பகுதியில் அதிக அளவு எடையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது.
    • மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் தற்போது அதிகளவில் வலைகளில் சிக்கி வருகிறது.

    இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. பலாசி மீன்கள் விலை போகாததால் அவைகளை கரையோரம் வீசி விடுவார்கள். இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிதித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    இதை அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
    • இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மீனவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.
    • மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மழையால் சிரமப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அப்பகுதி சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோயிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

    • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
    • அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தில் தென்னந் தோப்புக்குள் ராட்சத மலைப் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த ராட்சத மலைப்பாம்பு அங்கு விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற அந்த பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் அதனை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் வனக்காவலர் ஜோயல், வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • ஒரு கிலோ ரூ.510-க்கு விற்பனை
    • 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1 கிலோ எடையிருந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த 1ந் தேதி முதல் 6 ந் தேதி வரை பலத்த காற்று வீசும் என மீன் துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து குமரி மாவட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பாதி க்கப்பட்டது.இந்நிலையில் மழை சற்று குறைந்த நிலையில் நேற்று குறும்ப னை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை 6 மணியளவில் அவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் வலையில் ஏராளமான இறால் மீன்கள் கிடைத்தது. 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1கிலோ எடையிருந்தது.

    ஒரு கிலோ இறால் மீன் ரூ.490 முதல் ரூ.510 வரை விலை போனது.இதை மீன் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று குறும்ப னையில் இறால் மீன் கிடைத்த தால் குறும்பனை யில் மீனவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    • வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர்
    • பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் இலவணிகர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    இந்த வீடுகள் குளத்தின் கரையில் அமைந்து உள்ளதால் பாம்புகள் மற்றும் விஷ சந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக மீன்பிடி வலைகளை தடுப்பு வேலிகள் போன்று வீட்டை சுற்றி அமைத்துஉள்ளனர். இருப்பினும் இந்த மீன் பிடி வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த பாம்பு வலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    உடனே இதுபற்றி வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத் துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

    அந்த ராட்சத மலைப் பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திர மாக விட்டனர்.

    • சூறாவளி காற்றுக்கு இடையே மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது சிக்கியது.
    • ரூ.1 லட்சத்து10ஆயிரத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று சூறாளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இந்த சூறாவளி காற்றுக்கிடையே கன்னியா குமரியைச்சேர்ந்த விசை ப்படகு மீன வர்கள்வீசிய வலையில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத சுறாமீன் ஒன்று சிக்கியது.

    அதேபோல 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியது. உடனே அவர்கள் அவசர அவசரமாக சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கரைதிரும்பினர்.

    அதன் பிறகு அந்த 2 ராட்சத சுறா மீனை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் இறக்கினர்.

    அந்த ராட்சத மீனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும் 200கிலோ எடை கொண்ட சுறாமீன்ரூ.50ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

    பின்னர் அந்த 2 ராட்சத சுறா மீனையும் கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத சுறாமீன் சிக்கி உள்ளது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
    • வனத்துறையினர் அந்த பாம்பை காட்டில் விட்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் சுடுகாட்டு ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலை போடப்பட்டு இருந்தது. அந்த வலையில் ராட்சதமலை பாம்பு ஒன்று சிக்கிகொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தது. இதை அந்தப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    உடனேஇதுபற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சி லர் செல்வன் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்தார். அதன் பேரில் வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்தப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர். மலைப்பாம்பு 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது.அந்த மலைப்பாம்பை வனத்து றையினர் காட்டுப் பகுதியில் கொண்டுவிட்டனர்.

    ×