search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் ஆற்றில்  வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு
    X

    கொட்டாரம் ஆற்றில் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

    • வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
    • வனத்துறையினர் அந்த பாம்பை காட்டில் விட்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் சுடுகாட்டு ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலை போடப்பட்டு இருந்தது. அந்த வலையில் ராட்சதமலை பாம்பு ஒன்று சிக்கிகொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தது. இதை அந்தப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    உடனேஇதுபற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சி லர் செல்வன் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்தார். அதன் பேரில் வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்தப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர். மலைப்பாம்பு 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது.அந்த மலைப்பாம்பை வனத்து றையினர் காட்டுப் பகுதியில் கொண்டுவிட்டனர்.

    Next Story
    ×