search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "web"

    • சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன், அரசு பள்ளிகளை சேர்ந்த 2033 மாணவ, மாணவிகளில் கிரைம் தொடர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வு செய்து உள்ளார்கள்.
    • யூடியூபில் குழந்தைகள் பார்க்கும் சில நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் குற்ற ஆவணபடங்கள் குற்றவாளிகளை பெருமைப்படுத்துகின்றன.

    ஓ.டி.டி. தளத்தில் வெளிவரும் கிரைம் தொடர்களுக்கு குழந்தைகளும், இளம் தலைமுறையினரும் அடிமையாகி வருகிறார்கள். சென்னையை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒ.டி.டி. தளத்தில் துப்பறியும் தொடர் ஒன்றை பார்க்க தொடங்கி இருக்கிறார். அதில் தடயங்களை கண்டுபிடித்து அதை பின் தொடர்ந்து குற்றவாளியை பின் தொடர்ந்து பிடிப்பதற்காக தீட்டும் திட்டங்கள், அப்போது ஏற்படும் திகில் நிறைந்த திருப்பங்கள் பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறது. நாளை என்ன நடக்கும்? என்ற ஆர்வத்துடன் தவறாமல் பார்க்கிறார்கள்.

    அந்த காட்சிகளை பார்த்த மாணவிக்கு மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்துள்ளது. தூக்கத்தில் கனவுகள் வந்து பயமுறுத்தி இருக்கிறது. இதனால் சில தெருக்களுக்கு செல்வதையும் பொது இடங்களுக்கு செல்வதையும் கூட அந்த மாணவி தவிர்த்துள்ளார். அந்த அளவுக்கு பயம் அவரை துரத்தி இருக்கிறது.

    கிரைம் தொடர்கள் பிஞ்சு மனங்களில் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன், அரசு பள்ளிகளை சேர்ந்த 2033 மாணவ, மாணவிகளில் கிரைம் தொடர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வு செய்து உள்ளார்கள்.


    10 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 945 பேர், கல்லூரி மாணவர்கள் 1,013 பேர், ஆராய்ச்சி மாணவர்கள் 75 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவர்களில் 34 சதவீதம் பேர் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருந்தனர். தினமும் 2 மணிநேரம் கிரைம் தொடர்களை பார்த்து வந்த குழந்தைகள் 4 பேரில் ஒருவர் குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் இந்த மாதிரி தொடர்களை பார்ப்பதை பெற்றோர்களால் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. இதனால் சீரழிக்கும் படங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

    மேலும் யூடியூபில் குழந்தைகள் பார்க்கும் சில நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் குற்ற ஆவணபடங்கள் குற்றவாளிகளை பெருமைப்படுத்துகின்றன.

    அவ்வாறு குற்றவாளிகளையும் ஹீரோக்களாக சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் இளம் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன. ஓ.டி.டி. சேனலுக்கு தொடர் எழுதும் ஆர்வமுள்ள கே.அருண் கூறியதாவது:-

    "உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எந்த தணிக்கையும் இல்லாமல யூடியூப் சேனல்களுக்கு ஸ்கிரிப்டுகளை தேர்வு செய்கிறோம். டி.ஆர்.பி.யை அதிகரிப்பதற்காக ஓ.டி.டி. இயங்கு தளங்கள் சில நேரங்களில் கிராபிக்சுகளை சேர்க்கும்படி படைப்பாளிகளை ஊக்குவிப்பதாக கூறினார்.

    குற்றங்களை செய்யத் தூண்டும் சித்தரிப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் முன் எழுந்து உள்ள இந்த சவால்களை சந்திக்கும் வகையில் நிழலையும், நிஜத்தையும் அவர்களுக்கு வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்கிறார்கள்.

    • இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'வெப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது.


    இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் 'வெப்' படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர்.


    இயக்குனர் ஹாரூண் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பலபேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப் என்று கூறினார்.


    மேலும், இயக்குனர் ஹாரூண் பேசும்போது, பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலதான் தயாரிப்பாளர்களும் கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.

    • சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
    • இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயசந்திரராஜா (வயது 56). சிதம்பரத்தை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சிதம்பரத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இவர் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரை ஒரு மர்மக்கும்பல் கடந்த மார்ச் 21-ந்தேதி, ஏப்ரல் 5-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கொலை செய்ய முயற்சித்திது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெயசந்திர ராஜா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இவரை கொல்ல முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், கூலிப்படைத் தலைவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில் கூலிப்படைத் தலைவன் கும்பகோணம் தமூம் அன்சாரி (24) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர், நடிகர் என பண்முகத்தன்மை காட்டுபவர் நட்டி.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

    மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு, சண்டி முனி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நட்டி (எ) நட்ராஜ். இவர் கடைசியாக நடித்த கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இதனை தொடர்ந்து நட்டி நடிப்பில் சம்பவம், இன்ஃபினிட்டி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. இதனிடையில் நட்டி நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் வெப். இப்படத்தை இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். இதில் காளி மற்றும் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். இப்படத்தை கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

    வெப்

    வெப்

    இந்நிலையில் வெப் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பாக இடம் பெற்றுள்ள இந்த டீசர் தற்போது அனைவரையும் கவர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது.



    ×