குறும்பனையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறால் மீன்கள்

ஒரு கிலோ ரூ.510-க்கு விற்பனை27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1 கிலோ எடையிருந்தது.
குறும்பனையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறால் மீன்கள்
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த 1ந் தேதி முதல் 6 ந் தேதி வரை பலத்த காற்று வீசும் என மீன் துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து குமரி மாவட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பாதி க்கப்பட்டது.இந்நிலையில் மழை சற்று குறைந்த நிலையில் நேற்று குறும்ப னை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை 6 மணியளவில் அவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் வலையில் ஏராளமான இறால் மீன்கள் கிடைத்தது. 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1கிலோ எடையிருந்தது.

ஒரு கிலோ இறால் மீன் ரூ.490 முதல் ரூ.510 வரை விலை போனது.இதை மீன் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று குறும்ப னையில் இறால் மீன் கிடைத்த தால் குறும்பனை யில் மீனவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com