search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை"

    • முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
    • தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. முதலில் நடைபெறும் லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

    சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும். 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரில் ஒரு அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும்.

    அந்த வகையில், இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்று போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கிய முதல் போட்டியில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகளின் முடிவுகள் அமைகின்றன.

     

    2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 194 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 197 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணி 194 ரன்களை குவித்ததும், அமெரிக்கா அணி வெறும் 17.4 ஓவர்களில் 197 ரன்களை விளாசி வெற்றி பெற்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே தொடரின் 2-வது போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களில் பப்புவா நியூ கினியாவை சுருட்டியது. எனினும், இரண்டாம் பாதியில் 137 துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை 18 ஓவரின் கடைசி பந்தில் தான் எட்டியது. மேலும், எளிய வெற்றி இலக்கை துரத்துவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.

     

    ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஓமன் 109 ரன்களை அடித்தது. 110 ரன்களை துரத்திய நமீபியா அணியும் 20 ஓவர்களில் 109 ரன்களை அடிக்க சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.

    நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதலவாது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை விளாசியது. 22 ரன்களை துரத்திய ஓமன் அணி 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் நமீபியா அபார வெற்றி பெற்றது.

    அடுத்ததாக இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய தொடரின் 4-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெறும் 77 ரன்களில் ஆட்டமிழந்தது. 78 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. குறைந்த ரன்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி கடைசி வரை நீடித்தது.

     

    2024 டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டியின் போது கொண்டுவரப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்தது. 160 ரன்களை துரத்திய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 159 ரன்களை அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.

    இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது. 19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

     


    தொடரின் 16 ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. 104 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்கா அணி போராடி வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் போராடி வென்றது வியப்பை ஏற்படுத்தியது.

    டி20 தொடர் என்றாலே சுவாரஸ்யத்திற்கு குறையில்லை என்ற வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரும் அதற்கு உதாரணமாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் அணிகள் தடுமாறுவதும், சிறிய அணிகளாக பார்க்கப்படும் அணிகள் அபாரமாக விளையாடி வருவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.

    • இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.
    • 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இலங்கை அணியின் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான ஹசரங்கா புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலிங்காவின் 107 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் ஒரு மைல்கல்லை எட்டினார்.

    டி20 ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.

    • டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
    • இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

    இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    • 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டி காக்குடன், ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் டி காக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிளாசெனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். .

    இறுதியில் கிளாசென் 19 (22) ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், நுவன் துஷாரா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

    • ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.
    • தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    காத்மண்டு:

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது

    இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

    தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

    எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்தார்.

    இந்நிலையில், நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி நெதர்லாந்தை சந்தித்தது.

    முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன் எடுத்தார்.

    இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நெதர்லாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வனிந்து ஹசரங்கா 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து 20 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • 3-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வான் டெர் டுசன் அதிகபட்சமாக 31 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்ட களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 28 பந்தில் 44 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    • இந்த பட்டியலில் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோர் 5-வது இடத்தில் உள்ளனர்.
    • 3-வது இடத்தில் இயன் மோர்கன் உள்ளார்.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அது என்னவெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் உகாண்டாவின் பிரையன் மசாபாவை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகள்;

    பாபர் அசாம் - பாகிஸ்தான் - 45

    பிரையன் மசாபா - உகாண்டா -44

    இயான் மோர்கன் - இங்கிலாந்து - 42

    அஸ்கர் ஆப்கான் - ஆப்கானிஸ்தான் - 42

    எம்.எஸ்.டோனி - இந்தியா - 41

    ரோகித் சர்மா - இந்தியா - 41

    ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா - 40

    • டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
    • இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.

    இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

    மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
    • இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது.

    இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது எனவும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்கு பாதிப்பை கொடுக்கும் என ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

    விராட் கோலி இல்லாமல் டி20 உலக கோப்பை அசாத்தியமற்றது. அவர்தான் நம்மை 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் அவர்தான். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன?

    இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்கவேண்டும். எந்த உலக கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100 சதவீதம் கண்டிப்பாக அவர் தேவை. 2011-ல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    ×