search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா"

    • 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
    • பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    ஜோகன்னஸ்பர்க்:

    14 அணிகள் பங்கேற்கும் 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) 2027-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    இதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ், பிரிட்டோரியா செஞ்சூரியன் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்ஸ்மீட், கெபஹாவின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், பார்லில் உள்ள போலன்ட் பார்க், கேப்டவுனின் நியூலாண்ட்ஸ், புளோம்பாண்டீன், ஈஸ்ட் லண்டனில் உள்ள பப்பலோ பார்க் ஆகிய 8 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

    விமான நிலையம் மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்குவதற்கு அதிகமான ஓட்டல் அறை தேவை உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை பரிசீலித்து அதற்கு ஏற்ப போட்டிக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பெலெட்சி மோசிகி தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
    • லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களை குவித்தார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை.
    • நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன்.

    சிட்னி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர். இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.

    இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை. நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன். முன்னணி வீரர்கள் இன்றி விளையாடும் போட்டி எதற்கு என்று தெரியவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.' என்றார்.

    • இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.
    • சஞ்சு சாம்சன் 108 ரன்களை குவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-யை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.

     


    இந்திய அணிக்கு ராஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இவர்கள் முறையே 22 மற்றும் 10 ரன்களை குவித்து ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இவருடன் விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 108 ரன்களை குவித்து வில்லியம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 38 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ஹென்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும், மல்டர், மகாராஜ், வில்லியம்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம்தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

    இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள  தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

    இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு 248 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதோடு 91பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்க பாராளுமன்றம் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
    • இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நாளை (2-ந்தேதி) தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

    இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இவ்விழாவில் நேரில் பங்கேற்பதற்காக டா்பன் நகருக்கு சென்று மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ. சத்யா, துர்கா சத்யா ஆகியோரும், மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் மிக்கி செட்டி, கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் மாஸ்டர் ஹூகான் மெர்லின் ரெட்டி மற்றும் தமிழ்ச் சங்க செயல்பாட்டினர் ராஜராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்கள் எடுத்தபோது இவரும் அவுட் ஆனார்.

    இவரைத் தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல் முறையே 31, 21 மற்றும் 52 ரன்களை குவித்தனர். ஷதாப் கான் 43 ரன்களையும், முகமது நவாஸ் 24 ரன்களை எடுத்தார். ஷாகீன் அஃப்ரிடி 2 ரன்களிலும், முகமது வாசிம் 7 ரன்களையும் எடுத்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 270 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யென்சென் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • வங்காளதேசம் அணி சார்பில் மஹ்மதுல்லா சிறப்பாகி விளையாடி சதம் அடித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணிக்கு ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 12 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹாசன் 1 ரன்னிலும், முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மஹ்மதுல்லா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மெஹிடி ஹசன் மிராஸ் 11 ரன்களையும், நசும் அஹமத் 19 ரன்களையும், ஹசன் மஹ்முத் 15 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி வரை தென் ஆப்பிரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய மஹ்மதுல்லா 111 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 46.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 233 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, யென்சென் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.  

    • தென் ஆப்பிரிக்காவின் துவக்க வீரர் டி காக் 174 ரன்களை குவித்தார்.
    • வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் தன் பங்கிற்கு 60 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
    • இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

    ×