search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்த்"

    • டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுகிறார்.
    • கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வாய்க்கு கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒருவேளை விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறமாட்டார். ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக களம் இறக்க சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசிய விளையாட்டில் இவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 447 ரன்கள் குவித்துள்ளார்.

    இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது முற்றிலும் பாரபட்சம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவினர் மீது சாடியுள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் தேர்வானது எனக்கு குழப்பமாக உள்ளது. சுப்மன் கில் அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட சிறப்பாக உள்ளார்.

    சுப்மன் கில் தோல்வியடைந்த நிலையிலும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். அவர் தேர்வாளர்களின் ஆதரவை பெறுள்ளார். இது மிகப்பெரிய பாரபட்சம்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
    • இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது.

    இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது எனவும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்கு பாதிப்பை கொடுக்கும் என ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

    விராட் கோலி இல்லாமல் டி20 உலக கோப்பை அசாத்தியமற்றது. அவர்தான் நம்மை 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் அவர்தான். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன?

    இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்கவேண்டும். எந்த உலக கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100 சதவீதம் கண்டிப்பாக அவர் தேவை. 2011-ல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    • கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.

    தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கியது.
    • பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான பிரனோய் ஹாங்காங்கை சேர்ந்த லீ செயுக் யியூ-வுடன் மோதினார்.

    இதில் பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரான நிஷிமோட்டோவை 21-18, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் சுற்றில் 21-18, 21-13 என்ற கணக்கில் சகநாட்டவரான அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    • இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார்.
    • வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி ஃபெங் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 14-21, 21-14, 12-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். அத்துடன், தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    தரவரிசையில் இடம் பெறாத ஸ்ரீகாந்த், ஃபெங் இருவருமே துவக்கம் முதலே கடுமையாக போராடினர். ஆட்டத்தின் துவக்கத்தில் ஸ்ரீகாந்த் முன்னேறினாலும், பிறகு ஃபெங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட இடைவேளையின் போது 11-7 என முன்னிலை வகித்தார். ஸ்ரீகாந்த் சில தவறுகளை செய்ததால் பின்னடைவை சந்தித்தார்.

    ஃபெங்கின் கோர்ட் கவரேஜ் மற்றும் எதிர்பார்த்து ஆடும் திறமை, ஸ்ரீகாந்த்தின் ஆட்டத்தை விட சிறப்பாக இருந்தது. ஸ்ரீகாந்த் வலைக்கு அருகில் பல தவறுகளை செய்தார்.

    முதல் செட் ஆட்டத்தில், தன்னுடைய பழைய விளையாட்டு பாணியை இழந்தவராக தெரிந்த ஸ்ரீகாந்த், ஒரு சில இடங்களில் மட்டுமே நன்றாக ஆடினார். இந்த ஆட்டத்தில் முற்றிலுமாக வழக்கமான ஆட்டத்தில் இருந்து விலகியவராக தெரிந்தார். அதே சமயம் ஃபெங், தனது டிராப் ஷாட்களை துல்லியமாக அடித்து அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து அடுத்தடுத்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார். குறிப்பாக வலைக்கு அருகில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த செட்டை கைப்பற்றி 1-1 என சமன் செய்தார்.

    ஆனால் வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார். இதனால் ஃபெங் வசம் ஆட்டம் திரும்பியது. இடைவேளையின்போது, ஃபெங் தனது காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையிலும், 5 புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தார்.

    அதன்பின்னரும், காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்ரீகாந்தால் புள்ளிகளுக்கான இடைவெளியை நிரப்ப முடியவில்லை. இதனால் ஃபெங் அந்த செட்டையும் எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார். 

    இவர்கள் இருவரும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். இருவரும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளனர்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
    • பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.

    சிங்கப்பூர்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

    பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    கீர்த்தி பதிவு

    இந்நிலையில், 'தசரா' படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், " செட் அகற்றப்படுவதற்கு முன்பாக ஓடிச் சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'.
    • இப்படத்தின் 'அவிழாத காலை' பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'. இப்படத்தில் கதாநாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்துள்ளார்.

    தீங்கிரை

    சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை' என்னும் ரொமான்டிக் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.




    • சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது.
    • அடுத்து வரும் போட்டிகளில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.

    ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த கூறியுள்ளார். சென்னை, நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    இதில் 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இவ்விரு தொடர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடரில் 2 போட்டியில் 17 ரன் மட்டும் எடுத்த இவர், 2 ஒருநாள் போட்டியில் 15 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

    தவிர இவர், நடப்பு ஆண்டில் இதுவரை விளையாடிய 11 ஒருநாள் போட்டியில், 326 ரன் (சராசரி 40.75, ஸ்டிரைக் ரேட் 98.19) மட்டும் எடுத்துள்ளார். ஆனால், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 10 ஒருநாள் போட்டியில், 284 ரன் (சராசரி 71.00, ஸ்டிரைக் ரேட்105.57) எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன் (38 பந்து) விளாசினார்.

    இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே நிறைய பேர், பண்ட் சொதப்புகிறார் என பேசத் துவங்கிவிட்டனர். இதற்கேற்ப இவர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார்.

    தனக்குத் தானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்கிறார். இழந்த பார்மை மீட்டு, எழுச்சி பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இவர், சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது. தேர்வுக்குழுவினர், அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1990-களின் பிரபல நடிகை சிவரஞ்சனியும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இந்த தம்பதி தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    தமிழில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் தற்போது விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

     

    இதற்கு பதில் அளித்து சிவரஞ்சனி கூறும்போது, ''எனது கணவர் ஸ்ரீகாந்தும், நானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம். இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளப்போவதாக வெளியான தகவல் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தினமும் எங்களை தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் வரும் எங்களின் விவாகரத்து செய்தி முழுக்க பொய்" என்றார்.

    நடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''என் மனைவி மற்றும் குடும்பத்தின் மீது நான் உயிராக இருக்கிறேன். எனவே தயவு செய்து விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம்" என்றார்.

    • உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
    • டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.

    1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    ×