search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IREvPAK"

    கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களம் இறங்கிய அயர்லாந்து பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 130 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #IREvPAK
    அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. அந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ'பிரைன் அதிகபட்சமாக 40 ரன்களும், வில்லிசன் அவுட்டாகாமல் 33 ரன்களும், ஸ்டிர்லிங், ராங்கின் தலா 17 ரன்களும் அடிக்க அயர்லாந்து முதல் இன்னிங்சில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



    இந்த நான்கு பேரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டும், சதாப் கான் 3 விக்கெட்டும், முகமது அமிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அயர்லாந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 180 ரன்கள் பின்தங்கி பாலே-ஆன் ஆனது. பாகிஸ்தான் அணியும் பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் அயர்லாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டரில் பச்சை நிறம் காணாமல் போனதால் வாசிம் அக்ரம் வேதனை அடைந்துள்ளார். #IPL2018 #IREvPAK #WasimAkram
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-களில் தலைசிறந்த அணியாக விளங்கியது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது, சக்லைன் முஷ்டாக், இன்சமாம் உல் ஹக் போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடினார்கள்.

    பாகிஸ்தான் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பச்சை நிறமே. அந்த அணி ஒரு நாள் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸிதான் அணியும். டெஸ்ட் போட்டியின்போது வெள்ளை நிறத்தில் ஜெர்ஸி அணிந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் பச்சை ஒட்டியிருக்கும்.



    இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணத்தின்போது வீரர்கள் ஸ்வெட்டர் அணிவது உண்டு. அந்த ஸ்வெட்டரின் கழுத்துப்படை பச்சை நிறமாக இருக்கும்.

    தற்போது பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின்போது பாகிஸ்தான் வீரர்கள் அணிந்த ஸ்வெட்டரின் கழுத்துப்பட்டையில் பச்சை நிறத்தை காணவில்லை.



    இது வாசிம் அக்ரமிற்கு வேதனை அளித்தது. இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதையறிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதை கவனித்தில் கொண்டு வந்த வாசிம் அக்ரமிற்கு நன்றி தெரிவித்ததுடன், பச்சை நிறம் மிஸ் ஆகியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
    வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


    சதாப் கான்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. #IREvPAK
    அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கடந்த வருடம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் அயர்லாந்து பாகிஸ்தான் உடன் விளையாட முடிவு செய்தது.



    அந்த டெஸ்ட் இன்று டப்ளினில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி இன்று தொடங்கவில்லை. முதல்நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையினால் ரத்து செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டிற்காக அயர்லாந்து இன்னும் ஒருநாள் (நாளை) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    ×