search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    3வது போட்டியில் வெற்றி: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
    X

    3வது போட்டியில் வெற்றி: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

    • பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதமடித்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்ரும் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக ஆடி 73 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

    Next Story
    ×