என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உகாண்டா"
- அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.
- 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
- ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
One for the history books ✍️
— FanCode (@FanCode) November 30, 2023
Uganda are going to their first-ever ICC World Cup! They qualify for the 2024 T20 World Cup along with Namibia. ???
.
.#T20WorldCup2024 pic.twitter.com/M4kZVhEhU6
இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது.
- பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை.
- அடிப்படை தேவைகள் கிடைக்காததால் இரண்டு மனைவிகள் அவரை விட்டுச் சென்றுவிட்டனர்.
திருமணம் செய்து ஒன்றிரண்டு பிள்ளைகளை பெற்று வளர்ப்பதற்கே அல்லாடும் இந்த காலகட்டத்தில், உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 12 திருமணம் செய்துகொண்டு ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்.
உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா (வயது 68). இவர் ஒன்றல்ல, இரண்டல்ல.. 12 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களின் மூலம் 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகள் என ஒரு பெரிய பட்டாளமே உள்ளது. இந்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக் கூட மூசாவால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத அதிருப்தியில், இரண்டு மனைவிகள் மட்டும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். பண்ணை வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக 3 மனைவிகள் அருகில் உள்ள ஊரில் வசிக்கின்றனர். மற்றவர்கள் அவருடன் வாழ்ந்து வருகின்றனர்.
குடும்ப பாரம்பரியத்தை விரிவுபடுத்துவதற்கு பல பெண்களை திருமணம் செய்து, பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி அவரது சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறி உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் அடுத்தடுத்து திருமணம் செய்து பிள்ளைச் செல்வத்தை குவித்த மூசாவுக்கு, இப்போது 'போதும் போதும்' என்றாகிவிட்டது. பிள்ளைகளை அவரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மேற்கொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை தவிர்த்ததாக கூறுகிறார்.
உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. #Ugandamudslides
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்