search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்நாத் சிங்"

    • பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.
    • வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது போல மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னைக்கு இன்று வந்தார்.

    இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

    அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதன்பிறகு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளப்பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின்னர் ஐ.என்.எஸ். அடையாறில் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் இறங்கியதும் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிச்சாங் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகிறது.

    பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புறப்படுகிறார். 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் நேற்று மாலை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசாரம் செய்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பிரசாரம் செய்கிறார்.

     இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாளாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பொதுக்கூட்டம், ரோடுஷோ ஆகியவற்றில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், அவரது மகன் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தெலுங்கானா முழுவதும் தேசிய தலைவர்களின் படையெடுப்பால் களை கட்டியுள்ளது.

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான 3 மெகா பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விமானம் தாங்கி போர் கப்பல், 97 தேஜஸ் ரக விமானங்கள் வாங்குவது மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்களுக்கு பூர்வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தபடுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனினும் ராணுவத்தை வலுப்படுத்த இந்த திட்டங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் எம்.கே.1 ஏ. ஜெட் விமானங்கள் வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 97 தேஜஸ் மார்க் 1 ஏ போர் விமானங்கள் சுமார் ரூ.55 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படை வாங்கும் உள்நாட்டிலயே உருவாக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும்.

    இதேபோல 3-வது விமானம் தாங்கி கப்பல் மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் ஆகிய திட்டங்களும் பாதுகாப்பு துறையில் முக்கிய திட்டங்களாக கருதப்படுகிறது.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
    • இதில் பங்கேற்க அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று டெல்லி வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

    இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரை வரவேற்றார்.

    • வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
    • வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

    2024ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தனது பாராளுமன்றத் தொகுதியான லக்னோவுக்கு ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக வந்தார்.

    வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.

    பின்னர், வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் மட்டுமல்ல, பல அரசியல் பார்வையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    மகரிஷி வால்மீகியின் ராமர் ஒரு அரசர் மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர்... யுக் புருஷ் மற்றும் ஒரு அவதாரம் என்பதை முழு உலகமும் அறிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

    எல்லா பாரதவாசிகளும், உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கட்டும், ராமாயணத்தில் மகரிஷி வால்மீகியால் செதுக்கப்பட்டதைப் போல ராமரை மரியதா புருஷோத்தராகப் பார்க்கவும்.

    மேலும், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
    • குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது

    இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

    இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார்.
    • அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    கொழும்பு:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார். அதேபோல் அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதுகுறித்து இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கை ஆயுதப்படைகளுக்கு திறனை வளர்ப்பதில் உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கடனாக சுமார் ரூ.1240 கோடியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இதில் இதுவரை ரூ.826 கோடி கடன் பயன் படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு ராணுவ உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துபதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் சீனா போர்க்கப்பலான 'ஹையாங்-24' கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த கப்பல், இலங்கைக்கு வந்து சென்ற சில நாட்களில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையுடன் ராஜ்நாத்சிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனா, தனது ஆய்வு கப்பலான ஷியான்-6 யை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன.
    • சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

    ஜெய்ப்பூர்:

    ஜி20 தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி-20 சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் சமூகங்களுக்கான கூட்டம்  (சி20 கூட்டம்) இன்று தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் சி20 தலைவர் மாதா அமிர்தானந்தமயி, ராஜஸ்தானின் தொழில்துறை அமைச்சர் சகுந்த்லா ராவத், ஜெய்ப்பூர் எம்பி ராம்சரண் போஹ்ரா,

    உலகெங்கிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் G20 அதிகாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 31ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இன்றைய கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ஜனநாயகம் செயல்படுவதற்கு வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை என்றார்.

    தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் கலந்துரையாடல்களிலும், கூட்டு முயற்சிகளிலும் ஈடுபட உதவுவதாலும், தேசிய இலக்குகளை அடைவதற்கு உதவுவதாலும் இது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம். சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்,

    சி20 கூட்டத்தின் நிறைவு நாளில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜி20 இந்தியா ஷெர்பா அமிதாப் காந்த் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவான நாடாக உருவாகி இருக்கிறது.
    • பஸ்தாரில் கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருகிறது.

    காங்கர் :

    இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரில், பா.ஜனதா கட்சி தீவிர களப்பணிகளை ஆற்றி வருகிறது. அந்த கட்சி சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பழங்குடியினர் அதிகமாக வாழும் காங்கர் மாவட்டத்தில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார். தனது உரையில் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவான நாடாக உருவாகி இருக்கிறது. இனியும் பலவீனமாக இருக்கப்போவது இல்லை.

    எங்களுக்கு யாரும் தீங்கு செய்ய நினைத்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எங்கள் அண்டை நாடுகளுக்கு சொல்ல விரும்புகிறேன்.

    கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு மேற்கொண்ட வலிமையான நடவடிக்கைகளால் இடதுசாரி பயங்கரவாதம் வீழ்த்தப்பட்டு வருகிறது. தற்போது வெறும் 10 முதல் 12 மாவட்டங்களில் மட்டுமே இதன் தாக்கம் உள்ளது.

    சத்தீஷ்காரில் ஆளும் காங்கிரஸ் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருந்தால், இங்கு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் முற்றிலும் துடைத்து எறியப்பட்டு இருந்திருக்கும்.

    சத்தீஸ்காரில் குறிப்பாக, பஸ்தாரில் கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டில் வாஜ்பாய் கொண்டிருந்த உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும் கொண்டிருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சியோ, நாடு விடுதலை அடைந்தபின்பு தனக்கும், தனது அரசியலுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்தது. பழங்குடியினரை கண்டுகொள்ளவில்லை.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

    • 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.
    • வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது.

    ஜம்மு :

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

    மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    முன்பெல்லாம் சர்வதேச அமைப்புகளில் இந்தியா ஏதாவது சொன்னால், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.

    இப்போது, சர்வதேச அமைப்புகளில் இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

    பிரதமர் மோடியின் தலைமையால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவமும், அந்தஸ்தும் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அப்படி இல்லை.

    வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர், மோடியை 'பாஸ்' என்று சொல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடியிடம் 'ஆட்டோகிராப்' கேட்கும் அளவுக்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள்
    • டெல்லியில் கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

    மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே பஞ்சாப் மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் குறித்து ராஜ்நாத் சிங் தவறான தகவலை பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் பகவத் மான் ஆட்சியில் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

    மணிப்பூர் எரிவதையும், மக்கள் வீடுகள் இல்லாமல் தவிப்பதையும், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததையும் பார்க்கும்படி அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மற்ற மாநிலங்களை குறை கூறுவதை விட்டுவிட்டு அதற்கு முன், வன்முறைக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்.

    டெல்லியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீஸ் மத்திய அரசுக்கு கீழ் உள்ளது. ஒவ்வொரு நாளும் கொலை, கற்பழிப்பு, வழிப்பறி நடைபெற்று வருகிறது. டெல்லியில் குற்றம் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    • ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர்.
    • தமிழகத்தில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசு அமைந்தபோது நமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு கொடுத்தவர் அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்கள். அவர் மீது தமிழகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. நாமும் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்புடன் இருக்கிறோம்.

    ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர். அதேபோல்தான் ஏழைகள் முன்னேறுவதற்காக நம் பாரத பிரதமர் பெரும் பங்காற்றி வருகிறார். வாஜ்பாய் அவர்கள் தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தது போன்று இப்போது நம் பிரதமர் மோடியும் தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்தில் அதிமுகவில் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    ஊழல் வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் முன்பு அவரை ஊழல்வாதி என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்போது அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர் அதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக முதலமைச்சரின் பெயரையும், ரஷிய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினையும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், திமுக தலைவர் தனது பெயரைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறாரா? என்றார். மேலும், தமிழகத்தில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும், தமிழ்நாடு மற்றும் அண்டை நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.

    ×