என் மலர்tooltip icon

    இலங்கை

    • இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
    • நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.

    இந்தியாவில் ராணுவ பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

    இதில் கப்பலில் இருந்த ஈரான் ராணுவ வீரர்கள் 87 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர். மீட்பு நடவடிக்கையில் ஈரான் கடற்படை ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழலில் மற்றொரு ஈரானிய போர் கப்பலான ஐரிஸ் புஷெர் அதில் இருந்த 208 வீரர்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    மார்ச் 5 (வியாழக்கிழமை) அன்று, இந்தக் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் என மொத்தம் 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.

    இந்த கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அது நடுக்கடலில் தவித்தது. முந்தைய நாள் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதால், இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சத்தில் இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கொழும்பு துறைமுகம் வணிக ரீதியாக முக்கியமானது என்பதால், பாதுகாப்புக் கருதி இந்தக் கப்பலை இலங்கையின் வடகிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை கொண்டு செல்கிறது.

    இலங்கை அதிபர் இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.

    எங்களின் நடுநிலைமையை பேணிக்கொண்டே, மனித உயிர்களைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். "இப்படி ஒரு போரில் எவரும் இறக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் விலையுயர்ந்தது" என்றார்.

    இதற்கிடையே மார்ச் 4 அன்று தாக்குதலுக்கு உள்ளன ஐரிஸ் டேனா போர் கப்பலில் சுமார் 180 வீரர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இதுவரை 87 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 61 வீரர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் மீட்பு பணியில் உதவி வருகிறது. 

    • டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் (319) எடுத்த விராட் கோலியின் சாதனையை பர்ஹான் முறியடித்தார். சாஹிப்சாதா பர்ஹான் 7 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரை சதம் உள்பட 383 ரன்கள் குவித்துள்ளார்.

    • இலங்கை அணியை 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து போராடினார். பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    இந்நிலையில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பல்லேகலெ:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து அசத்தினார்.

    இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
    • பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    பல்லேகலெ:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 145 ரன்களைக் கடந்ததால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்னும், டிம் சைபர்ட் 35 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறஙகிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ரன்கள் தேவைப்பட்டது. வில் ஜாக்ஸ்-ரெஹான் அகமது ஜோடி அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். வில் ஜாக்ஸ் 32 ரன்னும், அகமது 7 பந்தில் 19 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறந்து விளங்கிய வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தோற்கும் நிலையில் இருந்த அணியை அதிரடியாக ஆடி வெற்றிக்கு அழைத்து சென்றதால் வில் ஜாக்ஸ் டிரெண்டிங் ஆனார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
    • கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்னும், டிம் சைபர்ட் 35 ரன்னும், பின் ஆலன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. டாம் பாண்டன் 33 ரன்னும், ஹாரி புரூக் 26 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ரன்கள் தேவைப்பட்டது. ரெஹான் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 32 ரன்னும், அகமது 7 பந்தில் 19 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
    • இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில், இலங்கை அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல முடியாததற்காக ரசிகர்களிடம் அந்நாட்டு கேப்டன் தசுன் ஷனகா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஷனகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் விரும்பியதை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய நிலைமையை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும்.

    என் மீதும், இலங்கை அணி மீதும் உங்களுக்கு இருக்கும் வேதனை, கோபத்தை நன்கு அறிவேன். இதனால் எழுந்துள்ள அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 107 ரன் மட்டுமே எடுத்தது.
    • இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது.
    • மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீட்சனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 31 ரன்னும், வெல்லாலகே 29 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்தின் லியம் டாசன் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், ஜோப்ர ஆர்ச்சர், ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

    35 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தவித்த இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாகப் போராடி சதமடித்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார் ஹாரி புரூக்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×