search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will jacks"

    • முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது.
    • அதைத்தொடர்ந்து ஆடிய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 254 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சர்ரே மற்றும் மிடில்சக்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 253 என்ற கடினமான இலக்கை துரத்திய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த சேசிங்கில் மூலம் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை மிடில்சக்ஸ் அணி படைத்துள்ளது. மேலும் டி20 ப்ளாஸ்ட் தொடரில் அதிகபட்ச இலக்கை துரத்திய முதல் அணி என்ற வரலாற்றையும் படைத்தது.


    இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 259 ரன்களை தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக சேசிங் செய்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 5 பந்திகளில் 5 சிக்சர்களை விளாசி சாதனையை படைத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபுல் டாஸ் பந்தை தவற விட்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார்.

    அதன் காரணமாக முதல் 5 பந்துகளில் 5 முரட்டுத்தனமான சிக்சர்களை அடித்த அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங், ஹெர்சல் கிப்ஸ், கைரன் பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.

    5 சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார்.
    • அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

    ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் என்பவரை ரூ. 3.2 கோடியில் ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக வில் ஜாக்ஸை வாங்கியது.

    ஐபிஎல் தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது தசையில் காயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் பிரேஸ்வெல் இதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது இல்லை.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

    ×