search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Huzurabad"

    • பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
    • குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது

    இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

    இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×