search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம்"

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
    • படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.


    இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது. 

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மற்றும் முதியோருடன் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.

    மேலும் குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,058 பேர் தரிசனம் செய்தனர். 22, 543 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    • புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

    இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல கோவில்களில் 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வடபழனி முருகன் கோவில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முருக பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை மூடப்படாது என்றும் இரவிலும் பக்தர்கள் உள்ள வரை சாமியை தரிசனம் செய்து செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்து செல்லும் வகையில் கோபுர வாசல் முதல் 150 அடிக்கு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தொடங்கப்பட்ட நாள் டிசம்பர் 31-ந் தேதி ஆகும். இதை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறும். மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடை பெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    தி.நகரில் உள்ள பத்மாவதி தாயார் சன்னிதானத்தில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அலங்காரங்கள், தீபதூப ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

    திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பூப்பந்தல் அமைத்து சாத்துப்படி அலங்காரம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    குரு தலமான பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கு வருகை தருவார்கள். டிசம்பர் 31 இரவு முதல் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட்டுள்ளன. சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 1-ந்தேதி இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 25 ஆயிரம் லட்டுகளும் தயார் செய்யப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சிங்காரவேலவர் வள்ளி- தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்வு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.

    சிங்காரவேலவருக்கு பதினாறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாரா தனையும் நடைபெற்றது.

    ஆலய உட்பிரகாரத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடனும், தியாகராஜர், பெருமாள் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் சொக்கபனை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில் அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம் ஆகும்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கல்யாணசுந்தரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்று கோவில் வளாகத்தில் பனை ஓலையால் 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதற்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மூலவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கார்த்திகை தீபதிருநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    முன்னதாக மூலவருக்கு மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தொடர்ந்து தேரடியில் அருகே அமைத்திருந்த சொக்கப்பணைக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் மற்றும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏற்றி வந்த பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முருகப்பெ ருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    ×