என் மலர்
இந்தியா

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் கடும் அவதி
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதி:
திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மற்றும் முதியோருடன் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.
மேலும் குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
திருப்பதியில் நேற்று 76,058 பேர் தரிசனம் செய்தனர். 22, 543 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Next Story






