என் மலர்

    நீங்கள் தேடியது "Chariot"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி ஸ்ரீ வேங்கடாஜலபதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று காலை துவங்கியது.

    ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளி னார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது.

    பக்தர்கள், பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்க ளில் வாசலில் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

    இதில் ஏராள மான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திரு இந்தளூர் பட்டர் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நாளை மாலை மணியளவில் பல்லவராயன் பேட்டை திருகுளத்தில் சுவாமி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
    • பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் புஷ்கரணி முழுவதும் தேவஸ்தான ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 66,598 பேர் தரிசனம் செய்தனர். 25,103 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.

    இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமானதும், செவ்வாய் தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள் பாலித்த தலமாகவும் திருக்கோளூர் வைத்த மாநிதி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு வைத்தமாநிதி பெரு மாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலமும் ஆகும்.

    கொடியேற்றம்

    ஆவணி பெருந்திரு விழாவை முன்னிட்டு காலையில் உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து கொடிபட்டம் மாடவீதியை வலம் வந்து கொடியேற்றம் நடந்தது.

    திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கருடசேவை

    5-ம் நாள் திருவிழாவான கருடசேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேரோட்டம்

    10 நாள் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. திரளான பொது மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோபாலா என கரகோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். அர்ச்ச கர்கள் பாலாஜி, ரகு, சுந்தரம் சீனிவாசன், தலத்தார்கள் திருவாயமொழிப்பிள்ளை, ஸ்ரீதரன், சடகோபன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் கவுன்சிலர் நாகமணி மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
    • தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    திருப்பத்தூர்:

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    நேற்று 9-ம் நாள் விழா ஆகும். விநாயகர் சதுர்த்தியும் என்பதால் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் விநாயகரை சந்தனக்காப்பு திருக்கோலத்தில் தரிசித்தனர்.

    மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். அதன் பின்னர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இதில் சண்டிகேசுவரர் தேரை முழுக்க முழுக்க பெண்களே இழுத்து வந்து தரிசித்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பிள்ளையார்பட்டிக்கு இயக்கப்பட்டன.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக சுவாமி தெட்சணாமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிறபட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது.

    தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாகப்பட்டினம் நவநீத கிருஷ்ணர் கோவிலில் தேர்ரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரினில் அலங்கரித்து வைக்கப்பட்ட ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது மேள மேளம் முழங்க பக்தர்கள் கிருஷ்ணா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்துவர, தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை சென்றடைந்தது.

    நவநீதகிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற திருத்தேர்ரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெபமாலை நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு புனித ஆரோக்கிய அன்னை ஆலய 123-வது தேரோட்ட திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ், நெல்லை உடையார்பட்டி பங்குத்தந்தை மைக்கேல்ராஜ், கயத்தாறு பங்குதந்தை எரிக்ஜோ, உதவி பங்குத் தந்தை அன்புஜோசப் ஜெபக் குமார் மற்றும் உபதே சிகர், விழா கமிட்டி யினர் உள்பட ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெப மாலை, புனித மத்தேயு அன்பியம் நடைபெறுகிறது.

    3-ம் நாளான நாளை தூய சவேரியார் கல்லூரி நவீன், 4-ம் நாள் சாந்திநகர் ஜீப்லி நிலைய ஜெமல்ஸ் ஜேம்ஸ், 5-ம்நாள் மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் சேவியர் அருள்ராயன், 6-ம் நாள் சேந்தமரம் பங்குதந்தை இமானுவேல் ஜெகன்ராஜா, 7-ம்நாள் சிதம்பராபுரம் பங்கு தந்தை அந்தோணிராஜ், கழுகுமலை பங்கு தந்தை ஆட்டோ, 8-ம் நாள் கயத்தாறு பங்கு தந்தை எரிக்ஜோ, 9-ம்நாள் மறைமாவட்ட செயலர் மற்றும் பணிக்குழு அருட்தந்தை லூர்து மரஇயசஉதன், 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெய பாலன் ஆகியோர் தலை மையில் திருப்பலி நடை பெறுகிறது.

    இதனை தொடர்ந்து 10-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு நற்கருனை, ஆசீர், கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலு கந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு அபிஷேகம்

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது கோவிலில் இருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்து காலை 5.40 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய ஆறுமுக சுரேஷ் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார்.

    பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இன்று மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்க ளுக்கு அருள்பாலிக்கிறார். 10 நாட்கள் நடைபெறும் இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    1-ந் தேதி தேரோட்டம்

    10-ம் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கி றது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், நகராட்சி உறுப்பினர் கெளரி கார்த்திகேயன், பழக்கடை திருப்பதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin