search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
    X

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்ற காட்சி.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

    • திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது.

    அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர் இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×