என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
கடலூர்:
கடலூர் திருப்பா திரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது . இக்கோவி லில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 4- ந்தேதி திருமஞ்சனம் மற்றும் அனுக்ஞை , வாஸ்து சாந்தி , அங்குரார்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது . தொடர்ந்து 5 - ந் தேதி ( செவ்வாய்க்கிழமை ) முக்கிய விழாவான பிரம்ம உற்சவ கொடியேற்று விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6 - ந் தேதி திருப்பல்லக்கும் , 7 - ந் தேதி திருப்பல் லக்கு - ராஜகோபாலன் சேவையும் 8 - ந் தேதி விமானம் வேணுகோபாலன் சேவையும் , தங்க கருட சேவையும், 9 - ந் தேதி நாச்சியார் திருக்கோலம் - ஊஞ்சல் சேவையும், 10 - ந் தேதி திருப்பல்லக்கும் , 11 - ந் தேதி சூர்ணாபிஷேகம் , 108 கலச திருமஞ்சனமும், 12 - ந் தேதி வெண் ணெய்த்தாழி உற்சவம் , வேடுபரி உற்ச வமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய சிகர விழாவான தேரோட்டம் இன்று 13 - ந் தேதி ( புதன்கி ழமை ) காலையில் நடைபெற்றது.
காலையில் வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் முக்கிய மாட வீதி வழியாக தேர் வலம் வந்தது. இதனை தொடர்ந்து தீர்த்தவாரி யும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயப்பட்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோவில் கட்டி சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது . ஆனால் இது வரை கோவிலில் தேரோட்டம் நடத்தியது கிடையாது . தற்போது தான் முதல் முறையாக தேரோட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் . அதனை தொடர்ந்து 14 மற்றும் 15 - ந் தேதிகளில் திருமஞ்சனமும் , திருக்கல் யாண உற்சவமும் , 16 - ந் தேதி விடை யாற்றி உற்சவமும் நடக்கிறது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்