search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neem tree"

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
    • திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.

    பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மரத்தில் தூக்கு போட்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மூதாட்டி பச்சை கலர் பூ போட்ட சேலையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
    • சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த மரத்தை நட்டு முடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள முகமது அலி தெருவில் கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு 150 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் கோவில் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    அந்த மரத்தை அதே இடத்தில் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கோவில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத்துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சாய்ந்த மரத்தின் கிளைகளை முழுவதுமாக முதலில் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் வேப்பமரத்தை அதே இடத்தில் நட்டனர். பணி நடைபெற்றபோது, மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் மரத்தின் வேரின் அடி பாகத்தில் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசப்பட்டது. மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த அந்த மரத்தை நட்டு முடித்தனர். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு சென்றனர்.

    • வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    • வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில், கோபால் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் இன்று காலை முதல் வெளி வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    மேலும் இதனை அறிந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வேப்பமரத்தை வழிபட்டு, பாலை பிடித்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. 

    • அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை வீடு திரும்பினார்.
    • அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை காமராஜர் வீதியில் ஆற்றோரத்தில் குடியிருப்பவர் முருகன் (60). முடி திருத்தும் கூலித்தொழிலாளி. இவர் தனியாக குடியிருந்து வருகிறார்.

    இவரது வீட்டின் எதிரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இன்று அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை 8 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார். பின்னர் அவ்வப்போது வெளியே எட்டி பார்த்துள்ளார்.

    வெளியே வந்தால் தேனீக்கள் அவரை நோக்கி வருவதால் அவர் மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்.

    அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இது குறித்து செல்போன் மூலம் அவருக்கு தெரிந்தவர் களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அப்பகுதிக்கு செல்ல மற்றவர்களும் அச்சப்படுகின்றனர்.

    மேலும் ஆற்றங்கரையில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் அவ்வழியே மரத்தை ஒட்டியவாறு தான் செல்ல வேண்டும். ஆனால் இதுவரை அப்பகுதியில் யாரும் செல்லவில்லை.

    இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.

    தோஷங்கள் நிவர்த்தியாக 12 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று நேற்று காலை வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம், வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×