search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiyapar Temple"

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.


    வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

    அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

    முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா். 

    • கிரந்த எழுத்து வடிவில் 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 4 நாட்களாக பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் நெல்லையப்பர் கோவில் நூலகத்தில் உள்ள சுவடிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தனர். மேலும் கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம் உள்ளிட்டவை குறித்த 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், பழமை வாய்ந்த சிறிய சிறிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்துள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. அதன் தொடக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.

    இந்த பிரதிகள் செய்தவரின் குறிப்புகள் இல்லை. இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட பட்ட யங்களை ஆராயும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பனையோலை சுவடிகளில் 281 ஓலைச்சுவடிகள் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லையப்பர் சுயம்பு வாக தோன்றும் திருவிளையாடல் காட்சி இன்று நடைபெற்றது.
    • விழாவையொட்டி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வரலாற்று நிகழ்ச்சி

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்பு வாக தோன்றும் திருவிளை யாடல் காட்சி 4-ம் நாளான இன்று நடைபெற்றது.

    இந்த வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் தாமிர சபை மண்டபம் அருகே அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம் முன்பு நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    வீதி உலா

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி உத்திர திருவிழா வின் 4-ம் நாளான இன்று இரவு சுவாமி நெல்லை யப்பர்- காந்திமதியம்மாள் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடக்கிறது.

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ேஜாடி களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இலவச திருமணங்கள்

    அதன்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படு கிறது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஏழை-எளியோர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    33 வகையான சீர்வரிசை

    அப்போது மணமக்களுக்கு பித்தளை குத்துவிளக்கு, 4 கிராம் தங்கத் திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, மிக்சி, கட்டில், பீரோ உள்ளிட்ட 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • குடியரசு தினவிழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோவில்களில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.
    • அதன்படி பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும்.

    நெல்லை:

    குடியரசு தினவிழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோவில்களில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

    அதன்படி பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும். இந்த ஆண்டும் சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வாசல் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி பிளிறியபடி மரியாதை செய்தது.

    அதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

    அதன்பின்னர் கோவில் அர்ச்சகர்கள் தேசிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர்.மேலும் அங்கிருந்தவர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. 

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

    நெல்லையப்பர் கோவில்

    நெல்லை டவுன் நெல்லை யப்பர் -ஸ்ரீகாந்திமதி அம்மன் கோவிலில் ஆறுமுக நயினார் சன்னதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது .

    இதில் பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். பின்னர் ஜோடிகளுக்கு சீர்்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தி.மு.க. பகுதி செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    • ஆனித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 11-ந் தேதி நடந்தது.
    • டவுன் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ந் தேதி நடந்தது. அன்றைய தினம் 5 தேர்களும் ரதவீதிகளில் வலம் வந்து நிலையம் வந்தடைந்தது.

    அப்போது சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு நின்று கொண்டிருந்த முருகன் தேர் மீது ஏறி வாலிபர் ஒருவர் சமுதாய கொடி ஒன்றை கட்டியதுடன் சமுதாயத் தலைவர்கள் புகைப்படம் பொறிக்கப்பட்ட தனது மேலாடை ஒன்றையும் அதில் வைத்து ஆட்டம் போட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் டவுன் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×