search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 couples"

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ேஜாடி களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இலவச திருமணங்கள்

    அதன்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படு கிறது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஏழை-எளியோர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    33 வகையான சீர்வரிசை

    அப்போது மணமக்களுக்கு பித்தளை குத்துவிளக்கு, 4 கிராம் தங்கத் திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, மிக்சி, கட்டில், பீரோ உள்ளிட்ட 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    ×