search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    X

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ேஜாடி களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இலவச திருமணங்கள்

    அதன்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படு கிறது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஏழை-எளியோர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    33 வகையான சீர்வரிசை

    அப்போது மணமக்களுக்கு பித்தளை குத்துவிளக்கு, 4 கிராம் தங்கத் திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, மிக்சி, கட்டில், பீரோ உள்ளிட்ட 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×