என் மலர்
நீங்கள் தேடியது "Department of Hindu Religious Charities"
- முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது.
- கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி இன்று (சனிக்கிழமை) சென்னை, கந்தக் கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது.
சென்னை, கந்தக்கோட் டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.
மனிஷ் பி.ஷா என்பவர் இக்கட்டிடத்தை ஆக்கிர மிப்பு செய்து மருத்துவ பயன்பாட்டை சிதைத்து 12 நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் அடைந்து வந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் மேல்முறையீட்டு உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரனால் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மேற்படி கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும்.
இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருவேங்கடம், கோவில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 610 கோவில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களும் மாதம் ரூ.20,000 வரை சம்பளம் பெறும் வகையில் முடி காணிக்கை கட்டணம் ரூ.25 ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் ஹரி ஜவஹர்லால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முடி காணிக்கை மற்றும் முடி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை கோவிலில் வேலை செய்யும் பூசாரிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிப்பது போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கோவில்களின் சார்பில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் ஆக மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை:
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் கோவில்களே ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4.12.2022 அன்று முதற்கட்டமாக திருவான்மியூரில் சென்னை மண்டலங்களை சேர்ந்த கோவில்களின் சார்பில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் ஆக மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக, நேற்று 19 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த கோவில்களின் சார்பில் 161 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யத்துடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவை, சீர்வரிசைப் பொருட்களாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் செய்திருந்தனர்.
2-ம் கட்டத்தில் வேலூர் மண்டலத்தில் 12 ஜோடி களுக்கும், சேலம் மண்ட லத்தில் 17 ஜோடிகளுக்கும், கோயம்புத்தூர் மண்ட லத்தில் 8 ஜோடிகளுக்கும், தஞ்சாவூர் மண்டலத்தில் 17 ஜோடிகளுக்கும், மயிலாடு துறை மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், விழுப்பு ரம் மண்டலத்தில் 4 ஜோடி களுக்கும், திருச்சி மண்ட லத்தில் 9 ஜோடிகளுக்கும், மதுரை மண்டலத்தில் 5 ஜோடிகளுக்கும், சிவகங்கை மண்டலத்தில் 12 ஜோடிகளுக்கும், திருநெல் வேலி மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 8 ஜோடிகளுக்கும், ஈரோடு மண்டலத்தில் 2 ஜோடி களுக்கும், திருப்பூர் மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், திருவண்ணாமலை மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், கடலூர் மண்டலத்தில் 10 ஜோடிகளுக்கும், தூத்துக்குடி மண்டலத்தில் 9 ஜோடிகளுக்கும், திண்டுக்கல் மண்டலத்தில் 16 ஜோடி களுக்கும் ஆக மொத்தம் 161 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் திருக்கோவில்களின் சார்பில் 378 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது.
- திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
1. அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.
2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் ஏழை எளிய வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000 தொகையினை ரூ.50,000ஆகஉயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
திட்ட விவரம்:
திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000
மணமகன் ஆடை:ரூ.1000
மணமகள் ஆடை: ரூ.2000
திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000
மாலை, புஷ்பம் - ரூ.1000
பீரோ : ரூ.7,800
கட்டில்-1 : ரூ.7,500
மெத்தை : ரூ.2,200
தலையணை-2 : ரூ.190
பாய்-1 : ரூ.180
கைக்கடிகாரம்-2 : ரூ.1,000
மிக்ஸி-1 : ரூ.1,490
பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640
கூடுதல் : ரூ.50,000
3. இந்துசமயஅறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டசெலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
- கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.
சென்னை:
இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ-ன் கீழ், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டக் குழுவின் தலைவராக க.சுப்பிரமணியமும், உறுப்பினர்களாக ப.கலைச்செல்வி, ராம. முத்துராமன் ப.ஜெகநாதன், க.சாமி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டக் குழுவின் தலைவராக ஆ. கலியபெருமாளும், உறுப்பினர்களாக மா.சண்முகம், டி.கே.ராமச்சந்திரன், சி.பாஸ்கர், சே.கோகிலா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (i), 46(ii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி இக்குழுக்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிககளின் தற்காலிக பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
- தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்திலுள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமர குருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பழனியிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட கலெக்டர் ச. விசாகன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
- டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நெல்லை:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லை யப்பர் -ஸ்ரீகாந்திமதி அம்மன் கோவிலில் ஆறுமுக நயினார் சன்னதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது .
இதில் பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். பின்னர் ஜோடிகளுக்கு சீர்்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தி.மு.க. பகுதி செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.