

வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகில் உள்ள பரப்புமேடு என்ற இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி பொறியாளர் கே. ஆர். கோபாலகிருஷ்ணன், வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் ஆகியோர் விநாயகர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நத்தக்காடையூர். காங்கயம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.