search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
    X

    மீனாட்சி அம்மன்- கல்யாணசுந்தரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா

    • 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில் அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம் ஆகும்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கல்யாணசுந்தரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்று கோவில் வளாகத்தில் பனை ஓலையால் 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதற்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×