search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி
    X

    கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

    • மூலவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கார்த்திகை தீபதிருநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    முன்னதாக மூலவருக்கு மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தொடர்ந்து தேரடியில் அருகே அமைத்திருந்த சொக்கப்பணைக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் மற்றும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏற்றி வந்த பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முருகப்பெ ருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×