search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை"

    • அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது.
    • மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறினர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி நேற்று முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டதால் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.


    அதே நேரத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.16-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அதே நேரத்தில் மகர விளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை மறுநாள் (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. திருவாபரணத்தை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

    • தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஜனவரி 13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.

    ஜனவரி 14-ந்தேதி உஷ பூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

    மகரவிளக்கு பூஜைக்காக திங்கட்கிழமை(வருகிற15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, வருகிற15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

    மேலும் வருகிற15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.


    வருகிற 20-ந்தேதி அன்று மாளிகைப் பரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.

    கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தேவசம்போர்டு முடிவு செய்தது.
    • மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    மண்டல பூஜை சீசனைப் போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தார்கள். தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.


    இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பதினெட்டாம்படி பகுதியிலேயே தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களை போலீசார் தாக்கினர். அவர்கள் சன்னிதான ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சபரிமலைக்கு வந்த பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவை நிறுத்துவது, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

    அந்த முடிவின்படி உடனடி முன்பதிவு நிறுத்தம் இன்று அமலுக்கு வந்தது. இதனால் நிலக்கல்லில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு மையம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் வராமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது. இதனால் சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பதினெட்டாம்படி மற்றும் சன்னிதான பகுதியில் நெரிசல் காணப்பட்டது.

    உடனடி முன்பதிவு நிறுத்தம் வருகிற 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். மகரவிளக்கு பூஜை முடிந்ததும் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை உடனடி முன்பதிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர்.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடுமையான வனப்பகுதிக்கு நடுவே, கடல் மட்டத்தை ஒப்பிடுகையில் 914 மீட்டர் உயரத்தில் மலைக்கு உச்சியில் இருக்கிறது சபரி மலை ஐயப்பன் கோவில்.

    இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னி சாமியாக (முதன்முறை) ஏராளமானோர் வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு முறை இங்கு வருவார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்புவார்கள். இருந்த போதிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தபோதிலும் அந்த காத்திருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்களுக்கு பெரிய சிரமமாக தெரிந்ததில்லை.


    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு நடந்து வரும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய நேரத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறையே கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவின்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் விருப்பமாக இருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அஞ்சுவதும் இல்லை, அதனை கடைபிடிக்க தவறுவதும் இல்லை. அதன்படியே ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தான் நடப்பு ஆண்டு மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஆன்லைன் முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், உடனடி முன்பதிவு முறையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையிலும் கூட பக்தர்கள் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 15 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. இந்த காலதாமதம் சபரிமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் சிரமம் அடையச் செய்தது. அதிலும் வயதான பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டனர்.

    இதனை கண்ட கேரள ஐகோர்ட்டு நேரடியாக தலையிட்டு சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டது. மேலும் நெரிசலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளையும் ஐகோர்ட் கூறியது. அதனை தேவசம்போர்டு மற்றும் காவல்துறை கடைபிடித்த போதிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுக்க முடியவில்லை. மண்டல பூஜை காலத்தில் ஏற்பட்டது போன்று மகர விளக்கு பூஜை காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால் மகர விளக்கு பூஜை காலத்திலும் அதே நிலை தான் நிலவி வருகிறது.

    தங்களது கஷ்டங்களை போக்கி அருள் புரிய வேண்டும் என்று ஐயப்பனை வேண்டுவதற்காக வரக்கூடிய பக்தர்கள், சாமியை தரிசிக்கவே கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பம்பை, சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படி என அனைத்து இடங்களிலும் நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமியை தரிசிக்க முடிகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்த ஐயப்ப பக்தர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர். இதன் காரணமாக பதினெட்டாம் படி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களை வேகவேகமாக இழுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சில பக்தரக்ள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சிலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பக்தர்கள் சிலர் பதினெட்டாம்படி பகுதியில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    பக்தர்கள் என்று கூட சிந்திக்காமல் போலீசார் அத்துமீறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை வரை வந்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமல் தங்களது ஊருக்கே திரும்பி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள். அவர்கள் பம்பையில் இரு ந்தே மன துக்குள் ஐயப்பனை நினைத்து வணங்கி விட்டு, தங்களது ஊருக்கு கண்ணீருடன் திரும்புவதை காண முடிகிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லாமல் திரும்பக்கூடிய தமிழக பக்தர்கள், வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

    48 மற்றும் 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வந்தால், அது அது நடக்கவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும்போது, நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். ஆனால் இதுவரை இதுபோன்ற சிரமத்தை நான் சந்திக்கவில்லை. எந்த ஒரு ஐயப்ப பக்தனும் இதுபோன்ற சிரமத்தை சந்திக்கக் கூடாது என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    சபரிமலையில் சந்தித்த சிரமங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:- ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. போலீசாரிடம் அத்துமீறல் குறித்து கேட்டால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்டு தாக்குகிறார்கள். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடப்பதை தடுக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு, தேவசம்போர்டு மற்றும் போலீசார் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், அதனை நிறை வேற்ற முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் பக்தர்கள் வருகை மூலம் கேரளா அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் சிரமப்படாமல் வந்து செல்லவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
    • சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருசநாடு:

    சென்னை திருநின்றவூர் புதிய சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் கடந்த 31-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு யாத்திரை குழுவினருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி சபரிமலைக்கு சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மலையை விட்டு இறங்கிய போது பம்பை ஆற்றங்கரையில் திடீரென சங்கர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    அப்போது சங்கர் மாலையை கழற்றி விட்டு இருமுடி இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து குருசாமி அவரிடம் கேட்ட போது அவர் போதையில் இருந்தது போல உளறியுள்ளார். அதன் பிறகு தேனி மாவட்டம் மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோவிலுக்கு அவர்கள் வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பார்த்த போது மீண்டும் சங்கர் மாயமானார்.

    சில மணி நேரம் கழித்து வந்த சங்கர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்து வண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டுச் சென்றனர்.

    போதை தெளிந்து எழுந்த சங்கர் செல்போனில் உடன் வந்த தனது நண்பர்களுக்கு போன் செய்தார். அப்போது தாங்கள் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறிவிட்டனர். இதனால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த சங்கர் தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்த சர்ச் முன்பு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது.

    இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது சகோதரி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய போது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள்.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு ஒருவர் விரதமிருந்து ஒருமுறை வந்துவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குள் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள்.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள். இதன் காரணமாகவே ஐயப்ப பக்தர்கள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.


    இந்நிலையில் ஒரு சிறுமி 50-வது முறையாக இந்த ஆண்டு சபரிமலைக்கு யாத்திரை வந்திருக்கிறார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அத்ரிதி. தன்னுடைய 10-வது பிறந்த நாளுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் தனது தந்தை அபிலாஷூடன் சபரிமலைக்கு இருமுடி கட்டி 50-வது முறையாக யாத்திரை வந்தார்.

    சிறுமி அத்ரிதி ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது முதன்முதலாக சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்திருக்கிறார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் வந்தபடி இருந்துள்ளார்.

    இதன்காரணமாக 10 வயதுக்குள்ளேயே 50முறை சபரிமலைக்கு வந்த பெறுமையை சிறுமி அத்ரிதி பெற்றிருக்கிறார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து 18 ஆண்டுகள் வருவார்கள்.

    அதன்பிறகு ஒரு சிலரே தொடர்ந்து தொடர்ச்சியாக சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால் சிறுமி அத்ரிதியோ, 10 வயதுக்குள் 50 முறை வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி அத்ரிதி எழுகோனில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    • அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும்.

    சபரிமலை:

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த பூஜையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும். அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி அன்று திறக்கப்பட்டது.

    இந்த வருடம் ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 16 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்வதால் சபரிமலையில் பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 10.30 முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    முன்னதாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தப்பட்டது. மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பின்னர் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் மண்டல கால பூஜை நிறைவுக்கு வந்தது. இந்த பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டதால் மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    • மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.
    • பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

    இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.

    அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.

    • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
    • நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

    அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.

    மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    • பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
    • பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.

    இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க தேவசம்போர்டு சார்பில் குடிநீர், பிஸ்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் முதன்முதலாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். நேற்று மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் இதுவே அதிகமாகும். இதன் காரணமாக நேற்று சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

    பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நீலிமலை, அப்பாச்சிமேடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மலையேற்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு பக்தர்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை நாளைமறுநாள்(27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆன்லைன் முன்பதிவு நாளை(26-ந்தேதி) 64 ஆயிரமாகவும், நாளை மறுநாள்(27-ந்தேதி) 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அய்யப்பனுக்கு அணி விக்கப்படும் தங்க அங்கி, நாளை மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சரங்குத்தி செல்லும் தங்க அங்கி ஊர்வலம், மாலை 6 மணியளவில் சன்னி தானத்தை சென்றடைகிறது.

    அதன்பிறகு அய்யப்ப னுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். நாளை மறுநாள் மண்டல பூஜை முடிந்து, இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    ×