என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐயப்பன் கோவில் மண்டலபூஜை. மகரவிளக்கு பூஜை"
- மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும்.
சபரிமலை:
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த பூஜையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள்.
இதுதவிர ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும். அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி அன்று திறக்கப்பட்டது.
இந்த வருடம் ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 16 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்வதால் சபரிமலையில் பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 10.30 முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தப்பட்டது. மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
பின்னர் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் மண்டல கால பூஜை நிறைவுக்கு வந்தது. இந்த பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டதால் மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்